bigg-boss-priyanka

அபிஷேக்கை பற்றி புரளி பேசும் ஹவுஸ் மேட்.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வருகின்றனர்.

இன்று விஜே அபிஷேக் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி போட்டியாளர்கள் இடையே பகிர்ந்து கொள்கிறார். கடவுள் மேல வைக்குற நம்பிக்கையின் மேல் எனக்கு  நம்பிக்கை இருக்கு என்று ஆரம்பிக்கிறார்.

எங்க அப்பா ரத்தம் சிந்தி சம்பாதிச்சது, யாரையும் ஏமாத்தல என்றும், அடிக்க அடிக்க நான் வந்து கொண்டுதான் இருப்பேன். பிடிக்கிதோ, பிடிக்கலையோ வேற வழி இல்ல என்று கூறுகிறார்.

அபிஷேக் பேசியதை கண்டு நடிகர் ராஜு அவன் சொன்னது எனக்கு ரிலேட் ஆச்சு என்றும், இமான் அண்ணாச்சி ரெண்டு வருஷத்துல நான் மீட்டெடுத்தேன்னு சொன்னது எனக்கு புடிச்சிருக்கு என்றும் பேசிக்கொள்கின்றனர்.

இந்த ப்ரோமோ பார்க்கும் பொழுது அபிஷேக் என்ன சொல்ல வரார்னு ஒன்னும் புரியல. இருந்தாலும் இந்த வார நாமினேஷன் க்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோனு தோணுது அந்த அளவுக்கு பர்பாமன்ஸ் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன எல்லாம் சொல்றேன் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து விடுறான் என்று கலாய்க்கின்றனர்.

vijay-tv-serials

கட்டிப்பிடி வாரமாகும் விஜய் டிவியின் 4 சீரியல்கள்.. கோபியும், ராதிகாவும் எங்கப்பா.?

விஜய் டிவியின் சீரியல்களுக்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த ப்ரோமோவ பார்க்கும் பொழுது இந்த வாரம் முழுவதும் கட்டிப்பிடி வாரம் போல் தெரிகிறது.

அதாவது என்னன்னா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களான பாரதிகண்ணம்மா, தென்றல் வந்து என்னை தொடும், பாவம் கணேசன், தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் தான் கட்டிப்பிடி வைத்தியம் நடக்குது.

காதலை சொன்ன சந்தோஷத்துல பாவம் கணேசன் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்பிடிப்பதை போலவும், தன்னோட இரண்டாவது குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் கண்ணம்மா தன் மகளை கட்டிப்புடிகிறாங்க அதுல ஒரு லாஜிக் இருக்கு.

இதுல சம்பந்தமே இல்லாம தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் மாமியாரும், மருமகளும் கட்டி பிடிக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு. சும்மாவே விஜய் டிவி சீரியல இஷ்டத்துக்கு கலாய்ப்பாங்க  இப்போ சொல்லவா வேணும்.

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் சொல்லி வச்ச மாதிரி ஜோடி ஜோடியா கட்டிப் பிடிக்கிறீங்களான்னு வடிவேலு ஸ்டைலில் கலாய்க்கிறாங்க. இதுல பாக்கியலட்சுமி சீரியலின் கோபியும், ராதிகாவும் தான் மிஸ்ஸிங்.

bigg-boss-nomination

பிக்பாஸ் முதல் நாமினேஷனில் வெளியேறப் போவது யார் தெரியுமா.? நேத்து பத்த வச்சது இன்னைக்கு எரியுது

பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் இன்று நடக்க உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாருன்னு சொல்ல சொல்லி ஒரு டாஸ்க் தரப்பட்டது. அதுல அதிகமா டிஸ்லைக் வாங்கியது அக்ஷராதான்.

இது கண்டிப்பா இன்னைக்கு நாமினேஷன்ல வரும்னு எதிர்பார்த்த நிலையில் நாமினேஷனுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை கன்பெக்ஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் நாமினேட் செய்ய விரும்பும் நபரை பற்றி கூற சொல்கிறார்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அக்ஷரா மற்றும் இசைவாணி பெயரை அதிகமாக சொல்கிறார்கள். அக்ஷரா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்ற காரணத்தை கூறி நாமினேட் செய்கின்றனர்.

மேலும் இசைவாணியால் இங்கு யாருடனும் இயல்பாக இருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரம் அக்ஷரா மற்றும் இசைவாணி நாமினேட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக வலம் வரும் அக்ஷரா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் நாமினேட் ஆகும் அக்ஷரா இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றப்படுவார் என்று தெரிகிறது.