ஆண்டவருக்கே பாடமெடுக்கும் ஆக்சன் கிங்.. விஜய் டிவி கொஞ்சம் சர்வைவர் பார்த்து திருந்துங்க

பல முன்னணி தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்களை பல பெரிய நடிகர்களை வைத்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் செல்வதற்கு முக்கிய காரணமே நடிகர் அர்ஜுன் தான். இவர் போட்டியாளர்களுடன் உரையாடும் விதம் கலக்கல் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

போட்டியாளர்களை தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவதிலும், தவறு செய்யும் பொழுது கண்டிப்பதிலும் ஆக்ஷன் கிங் வேற லெவல்.

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் ஐஸ்வர்யா தனக்கு பிரைவசி இல்லை என்று கூறினார். இதை அவரிடம் கேட்ட அர்ஜுனிடம் நான் அவ்வாறு சொல்லவில்லை என்று வாக்குவாதம் செய்தார். இதை நிரூபித்தால் வீட்டிற்கு செல்ல தயாரா என்று அர்ஜுன் கேட்டார்.

மேலும் இங்கு பாத்ரூமை தவிர வேறு எங்கும் பிரைவசி கிடையாது, நீங்க என்ன நினைக்கிறீங்க, எப்படி விளையாடுறீங்க என்று பார்க்கத்தான் இந்த ஷோ. பிரைவசி வேணும்னா வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே என்று கடுமையாக கூறினார்.

அர்ஜுனால் இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் மெருகேறி வருவதாக கூறும் ரசிகர்கள் நீங்கள் தான் இந்த ஷோவின் உயிர்நாடி என்று புகழ்ந்து வருகின்றனர். மேலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டயலாக் பிக்பாஸை விட இந்த நிகழ்ச்சிக்குத்தான் பொருந்தும் என்று ரசிகர்கள் பதிவிடுகின்றனர்.

Next Story

- Advertisement -