விஜய் டிவி டிஆர்பி-க்கு ஆப்பு அடிக்கும் ஆலியா? திடீர் முடிவால் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் கடந்த சில நாட்களாகவே அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி, சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வில்லியான அர்ச்சனா இவ்வளவு நாள் செய்த எல்லா சதி வேலையும் வீட்டுக்கு தெரிந்து, ஆடி அடங்கி போயிருக்கிறார்.

அத்துடன் சந்தியாவை பழிவாங்கவேண்டும் என்று வெறி கொண்டு காத்திருக்கும் அர்ச்சனா, அதற்கான தக்க சமயத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் கதாநாயகி சந்தியா நிஜ வாழ்க்கையில் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், இனி இந்த சீரியலை தொடர்வது சிரமமாக இருக்கும்,

எனவே பிரசவத்தை முன்னிட்டு சந்தியாவாக நடிக்கும் ஆலியா மானசா ராஜா ராணி2 சீரியலில் இருந்து கூடிய விரைவில் விலக வாய்ப்பிருக்கிறது. இதனால் சில மாதங்களுக்கு சந்தியா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக வேறு ஒரு நடிகையை சீரியல் இயக்குனர் வலைவீசி தேடப் போகிறார்.

இருப்பினும் இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆலியா மட்டுமே நடிப்பார் என்று ஏற்கனவே சீரியலின் இயக்குனர் பிரவீன் பிரசாத் கூறியிருக்கும் நிலையில், ஆலியா மானசாவை வைத்து சில மாதங்களுக்கு சந்தியா இருக்கும் காட்சிகளை மட்டும் வேகவேகமாக முன்கூட்டியே காட்சிப்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.

இருப்பினும் நிறைமாத கர்ப்பிணியை சிரமப்படுத்துவதா! என்ற கோணத்தில் பார்க்கும்போது சீரியலின் இயக்குனர் வேறொரு நடிகையை தேட யோசிப்பார். ஆகையால் ராஜாராணி சீரியலுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை எப்படி சரிசெய்ய போகிறோம் என்று சீரியல் குழுவினர் குழம்பித் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே சந்தியாவை ஐபிஎஸ் ஆக காட்டவேண்டும் என சீரியலின் இயக்குனர் திட்டமிட்டபோது திடீரென்று ஆலியா கர்ப்பமாக இருப்பதை தெரிந்ததும் கதையை வேற மாதிரி மாற்றினார். தற்போது ஆலியா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இந்த சமயத்தில் மீண்டும் அதற்கேற்றார்போல் கதையை மாற்றுவாரா? அல்லது கதாநாயகியை மாற்றுவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்