பிக் பாஸில் இந்த வார நாமினேஷன லிஸ்ட்.. வெளியேறப் போவது இவர்தானாம்.!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதால் வீட்டில் இருக்கும் 10 போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கும். அத்துடன் ஒவ்வொரு வாரம் ஒரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து நாமினேஷன் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் லிஸ்ட் தற்போது ரெடியாகி உள்ளது. இதில் சிபி, நிரூப், பிரியங்கா, பாவனி, அக்ஷரா, வருண் ஆகிய 6 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவராக தாமரை செல்வி தேர்வு செய்ததால், அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.

அத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்த அமீர் மற்றும் சஞ்சீவ் இருவரும் நாமினேஷன் லிஸ்டில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டன. அதேபோல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் பிடித்தமான ராஜு, இந்தவார நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பித்துவிட்டார்.

ஆகையால் இவர்களைத் தவிர மற்ற ஆறு பேரும் தற்போது நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்று, மக்கள் ஓட்டினை நம்பியுள்ளனர். கடந்த வாரமே கடைசி நபராக காப்பாற்றப்பட்ட வருண் இந்த வாரமும் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றதால், அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது அந்நியனாக மாறிக்கொண்டு, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்யாத நிரூப் சென்றவாரம் பஸ் டாக்கின் மூலம் வெற்றி பெற்று நாமினேஷனிலிருந்து தப்பித்து, இந்த வாரம் மாட்டிக்கொண்டார். நிரூப்பிற்கும் மக்களிடையே குறைவான ஆதரவு மட்டுமே இருப்பதால், அவரும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆகையால் நிரூப் மற்றும் வருண் இருவருள் ஒருவர் மக்களிடம் குறைந்த ஓட்டுக்களைப் பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற உள்ளனர். இருப்பினும் வரும் ஞாயிற்றுக்கிழமை யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்