பாண்டியன் ஸ்டோர்ஸில் காத்திருந்த பேரதிர்ச்சி.. குடும்பத்தையே உலுக்கிய சம்பவம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் முல்லைக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு குறைவாக உள்ளதை நினைத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே வருத்தத்தில் இருந்தது. மேலும், இதனால் முல்லையும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.

இந்நிலையில் முல்லையின் சிகிச்சைக்காக மூர்த்தி 5 லட்சம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார். சிகிச்சையும் நல்லபடியாக முடிந்துள்ளது. இதனால் கதிர் முல்லையை தாங்கு தாங்கு என தாங்குகிறார். தற்போது முதல் வார சிகிச்சைக்கு செல்லும் போது எல்லாம் பாசிடிவாக உள்ளது.

ஆனால் இன்னும் சில தினங்கள் போனால் மட்டுமே முல்லை கர்ப்பமாக இருக்கிறார் என்பது உறுதி செய்ய முடியும் என மருத்துவர் கூறுகிறார். இந்நிலையில் தற்போது கடன் கொடுத்தவர்கள் மூர்த்தியிடம் பணத்தைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதனால் கதிருக்கு, கடன் வாங்கி தான் முல்லைக்கு மருத்துவம் செய்து உள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் கதிர் மிகுந்த கவலை கொள்கிறார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் அதிரடி திருப்பங்களுடன் வரக் காத்திருக்கிறது. முல்லைக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போகும்.

மேலும் இந்த சிகிச்சை மூலம் தற்போது முல்லைக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர் சொல்ல அது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தையே உலுக்குகிறது. இந்த சிகிச்சைக்காக சோலையாக 5 லட்சத்தை கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இதன் மூலம் பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

மேலும் கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு நச்சரிக்க என்ன செய்வது என்று தெரியாமல் மூர்த்தியும், அவரது தம்பிகளும் நிலைகுலைந்து உள்ளனர். இவ்வாறு மிக இக்கட்டான சூழ்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வர இருக்கிறது. இதிலிருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் எப்படி மீண்டு வரும் என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்