Actor Vija: விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை ஆரம்பித்தது பல பேருக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. அதிலும் அவர் கொடுத்த உச்சகட்ட அதிர்ச்சி பல தயாரிப்பாளர்களை புரட்டி போட்டு விட்டது.
அதாவது கோட் படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படத்தோடு நடிக்க மாட்டேன் என்ற அவர் அறிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் ஒரு பக்கம் கவலையில் இருக்க திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் என அனைவரும் அதிர்ந்து போய் இருக்கின்றனர்.
விஜய்யை சந்தித்த விநியோகஸ்தர்
ஏனென்றால் விஜய் படம் பாக்ஸ் ஆபிஸை கலக்கி வசூல் வேட்டையாடும். இதன் மூலம் பல பேர் கோடிக்கணக்கில் லாபம் பார்த்து விடுவார்கள்.
தளபதியுடன் தரணி
அப்படித்தான் தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸான கில்லி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதை வெளியிட்ட விநியோகஸ்தரும் லாபத்தை பார்த்துள்ளார்.
விஜய்க்கு கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்
அதன் காரணமாகவே அவர் தற்போது விஜய்யை சந்தித்து ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த வகையில் கில்லி படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.
ரிஸ்க் சண்டைக்காட்சியால் விஜய்க்கு ஏற்பட்ட காயம்
திரையரங்குகளில் இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்த அவர் தளபதியை நேரில் சந்தித்துள்ளார். அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
மேலும் நீங்கள் மக்கள் பணி செய்வது சந்தோஷம்தான். ஆனால் வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என அன்பு கோரிக்கையும் வைத்திருக்கிறார். இதற்கு தளபதியும் சிரித்தபடி தலையாட்டி இருக்கிறார்.
இதனால் அவருடைய மனம் மாறுமா என்று ஆவலும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மக்கள் பணி என்பதுதான் என்னுடைய இலக்கு என விஜய் முடிவு செய்து விட்டார். அதனால் மீண்டும் அவர் சினிமா பக்கம் வருவாரா? என்பது மிகப்பெரும் கேள்விக்குறிதான்.