ஓவர் பந்தா காட்டும் பிக்பாஸ் தாமரை.. எங்க போய் முடியப் போகுதோ!

விஜய் டிவியில் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. அதில் ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பப்படி ராஜு அதிக ஓட்டுக்களைப் பெற்று பிக்பாஸ் டைட்டிலை வென்றார். கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசனில் அதிகம் பிரபலம் இல்லாத போட்டியாளர்களே பங்கேற்றனர்.

அதில் மேடை நாடகக் கலைஞரான தாமரைச் செல்வியும் ஒருவர். ஆரம்பத்தில் மிகவும் வெகுளித்தனமாக இருந்த இவர் போகப் போக அதிரடியாக மாறினார். பிக் பாஸ் வீட்டில் நடந்த பல சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் தாமரை முக்கிய காரணமாக அமைந்தார். அதிலும் பிரியங்காவுடன் நடந்த கை கலப்பு பெரும் சர்ச்சையாக மாறியது. இருப்பினும் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரை அவர் செல்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக தாமரை பிக்பாஸ் வீட்டிலிருந்து குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தாமரை கடந்த வாரம் பினாலேவிற்கு செல்லும்போது அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மீண்டும் தாமரை பிக் பாஸ் வீட்டுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அப்போது வந்த தாமரையிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. தாமரையின் நடை உடை பாவனை அனைத்தும் முற்றிலும் வேறாக மாறியிருந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது எந்த ஆடம்பரமும் இல்லாமல் மேக்கப் அதிகம் போடாமல் எளிமையாக இருந்தார். ஆனால் தற்போது இருக்கும் தாமரையோ ஓவர் பந்தாவாக இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற பினாலே நிகழ்ச்சியில் கூட தாமரை ஓவர் மேக்கப் உடன் வந்திருந்தார். நேற்று நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் தாமரையின் இந்த மாற்றம் மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. இதுபோன்று பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி ஆரம்பத்தில் எளிமையாக இருந்தார்.

பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் ஓவர் பந்தா காட்டிய அனைவரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இப்போது தாமரைக்கும் ஜூலி போன்ற நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்