மக்களால் வெறுக்கப்பட்ட அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் உள்ளே வர காரணம் என்ன தெரியுமா.?

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் இரண்டாவது வாரத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா தற்போது பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வைல்டு கார்ட் என்ட்ரி ஆக நுழைந்துள்ளார். இவர் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது பிரியங்கா, நிரூப் உடன் கூட்டு சேர்ந்துகொண்டு வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்கள் இவர்களுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி தனியாக ஒரு விதிமுறைகளை வகுத்து அவ்வாறு விளையாடி கொண்டிருந்தன.

அந்த சமயத்தில் இவர்களைத் தவிர மற்ற போட்டியாளர்களின் தனித்தன்மை சுத்தமாகவே வெளிப்படவில்லை. என்னதான் அதிக கன்டென்ட் அபிஷேக் ராஜா கொடுத்தாலும் மற்றவர்களை ஓரம்கட்ட படுபயங்கரமான பிக்பாஸ் வீட்டில் அபிஷேக் கட்டம் கட்டி கொண்டிருந்தார்.

இதைப் பிடிக்காத பிக்பாஸ் ரசிகர்கள் குறைந்த வாக்குகளை அபிஷேக் ராஜாவிற்கு அளித்து எலிமினேட் செய்தனர். பின்பு, இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இல்லாத நான்கு வாரங்களில் குறைந்த அளவு விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் நடந்தது.

தற்போது நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்த காரணத்தினால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அபிஷேக் ராஜா வருகை தந்துள்ளார். இதேபோன்றுதான் பிக் பாஸ் சீசன்3ல் வனிதாவும் எலிமினேட் செய்யப்பட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார்.

ஆகையால் கண்டெண்ட் கொடுக்கும் கன்டஸ்டன்ட்களை எப்பொழுதுமே பிக்பாஸ் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் சூட்சமம். ஏனென்றால் அப்பொழுது தானே டிஆர்பி ரேட்டிங் எகிறும் என்று விஜய்டிவி இவ்வாறு பக்கா ப்ளான் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே அபிஷேக் ராஜா வரும் வாரத்தில் நிகழ்ச்சியின் போக்கை மாற்றுவாரா? சுவாரசியத்தை கூட்டுவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்