புருஷனுக்காக உயிரை பணயம் வைக்கும் சந்தியா.. ராஜா ராணி2 சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்தி சீரியலை தற்போது தமிழ் நடிகர்களை கொண்டு ‘ராஜா ராணி2’ என்ற பெயரில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. எனவே கதை என்ன என்பது தெரிந்திருந்தாலும், இதில் சந்தியா கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசாவிற்கவும், சரவணன் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கும் சிந்துவிற்காகவும் சின்னத்திரை ரசிகர்கள் இந்த சீரியலை தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது சமையல் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் சரவணனுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு ஒரு கை செயலிலிருந்து விட்டது. எனவே இதை சரி செய்யும் நோக்கத்தில் சந்தியா தற்போது நீச்சல் குளத்தில் திடீரென்று தவறி விழுந்து விட்டார். இதை உடனே பார்த்த சரவணன் சந்தியாவை காப்பாற்றும் நோக்கத்தில் நீச்சல் குளத்தில் சீறிப்பாய்ந்து சந்தியாவை மீட்டெடுத்தார்.

அப்போது அவரையே அறியாமல் அவருடைய செயலிழந்த கை மீண்டும் செயல்பட்டது. சந்தியாவிற்கு ஏற்கனவே நீச்சல் தெரிந்திருந்தாலும் சரவணனை எப்படியாவது குணப்படுத்தி போட்டியில் கலந்து கொள்ள வைக்க வேண்டும் என்று நீச்சல் குளத்தில் தவறி விழுந்தது போல் நடித்து சரவணன் உடைய கையை சரி செய்துள்ளார்.

ஆகையால் சரவணன் தற்போது மீண்டும் போட்டியில் கலந்து கொள்கிறார். அப்போது சரவணனை எப்படியாவது தோற்கடித்துவிடலாம் என்ற நோக்கத்தில் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அர்ச்சனாவை கூட்டு சேர்த்துக்கொண்டு சதி செய்யும் சல்மா உடன் தான் சரவணன் அடுத்த சுற்றில் சேர்ந்த சமைக்க வேண்டும் என்ற அதிரடியாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் பாகற்காயை வைத்து சமைக்க வேண்டும் என்ற டாஸ்க்கை, சரவணன் மற்றும் சர்மாவிற்கு கொடுக்கப்பட்டது. ஆனால் சர்மாவிற்கு பாகற்காயை வைத்து எதுவும் செய்ய தெரியாது என்று சரவணனிடம் சொல்லிவிட, அதன் பிறகு சரவணன் பாகற்காயை வைத்து அசத்தலான சமையலை செய்து முடிக்கிறார். அதன் பிறகு சரவணன் சமைத்த பாகற்காய் டிஸ்களை சுவைத்துப் பார்த்த நடுவர்கள் அசந்து போயினர். அதுமட்டுமின்றி இந்த சுற்றில் சரவணன் மற்றும் சல்மா இருவருடைய கூட்டணி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

சமையல் போட்டியில் சரவணன் ஜெயிக்க கூடாது என்பதற்காக பல சதி வேலைகளை செய்த சர்மாவிற்கு, சரவணன் தன்னுடைய நல்ல குணத்தை வெளிப்படுத்தி சவுக்கடி கொடுத்து விட்டார். எனவே இவ்வளவு நாள் சோகமாக சென்றுகொண்டிருந்த ராஜா ராணி2 சீரியலில் தற்போது அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்