சிக்கனால் சின்னாபின்னமான சரவணன்.. சமையல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பபடுவாரா?

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தற்போது விருவிருப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமையல் போட்டிக்காக சென்ற சரவணன் ஒவ்வொரு முறையும் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டு, அதிலிருந்து சந்தியா மீட்டெடுத்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு பிரச்சனை உருவெடுத்துள்ளது. என்னவென்றால் சரவணன் ஊரில் திருவிழா நடப்பதால் காப்பு கட்டிய பின் மாமிசத்தை தொடவும் கூடாது, உண்ணவும் கூடாது என்ற விதிமுறை அவருடைய ஊரில் இருப்பவர்கள் பின்பற்றுவார்கள்.

ஆனால் தற்போது சரவணன் சமையல் போட்டியில் சிக்கன் சமைக்க வேண்டும் என்று புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த போட்டியில் இருந்து விலக வேண்டும் என்றும், திரும்பவும் ஊருக்கே சென்று விடலாம் என்றும் சரவணனின் அம்மா சொல்ல, இதனால் சந்தியா எப்படியாவது சரவணனை போட்டியில் பங்கேற்க வைக்க படாதபாடு படுகிறார்.

அதன் பிறகு சந்தியாவிற்கு ஒரு யோசனை வர, சிக்கனுக்கு பதில் வேறு ஒரு பொருளை வைத்து சமைத்து சிக்கன் போல் காண்பித்த விடுகின்றனர். சரவணன் சமைத்த உணவை பிரமாதமாக புகழ்ந்த நடுவர்களும் சரவணனை ஃபைனல் போட்டிக்கு அனுப்ப முடிவு செய்து விடுகின்றனர்.

ஆனால் அந்த சமயத்தில் சரவணன் இது சிக்கன் அல்ல என்று சொல்லிவிட பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு, போட்டியில் இருந்து வெளியேற நடுவர்கள் உட்பட பார்வையாளர்களும் கூச்சலிடுகின்றனர்.

இதன்பிறகு சரவணன் சமையல் போட்டியில் தொடர்வாரா மாட்டாரா என்ற விறுவிறுப்புடன் ராஜா ராணி2 சீரியல் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் சந்தியா நடுவரை ஏதாவது ஒன்று சொல்லி சமாதானப்படுத்தி சரவணனை போட்டியில் மீண்டும் தொடர வைத்து, வெற்றி தொகை 5 லட்சத்தை ஜெயித்து விட்டு மட்டுமே ஊருக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்