நேரில் சந்தித்து முடிவு கட்டிய ராதிகா.. அதிர்ச்சியில் உறைந்து போன பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் கணவர்தான் கோபி என்ற விஷயத்தை தெரிந்ததும் ராதிகா, கோபியை அடியோடு வெறுக்கிறாள். கோபியால் ராதிகாவை விட்டு ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்க முடியவில்லை. எப்படியாவது ராதிகாவை சமாதானப்படுத்தி மீண்டும் அவளுடைய காதலனாக வாழ வேண்டும் என அவள் வீட்டு வாசலிலேயே போய் நிற்கிறான்.

இருப்பினும் கோபியை துளிக்கூட ஏற்றுக்கொள்ள தயாராகாத ராதிகா, அவனின் நாயை போல விரட்டி அடிக்கிறாள். ஒருகட்டத்தில் ராதிகாவின் மகள் மையூ மூலம் காய் நகர்த்திய கோபிக்கு அதிர்ச்சியூட்டும் அளவுக்கு ஒரு முடிவை எடுத்திருக்கிறார். சென்னையில் இருந்தால் தானே அடிக்கடி வந்து டார்ச்சல் செய்கிறாய் என மும்பைக்கு தன்னுடைய வேலையை மாற்றி நிரந்தரமாக செல்ல முடிவெடுத்துவிட்டாள்.

இதை ராதிகாவின் நெருங்கிய தோழியான பாக்யாவை கோயிலுக்கு வர வைத்து அவளிடம் தான் இதை முதல் முதலாக சொல்கிறாள். உடனே ராதிகா இரண்டாவது திருமணம் செய்ய இருந்த கல்யாண விஷயம் என்னாச்சு என பாக்யா கேட்க, அதைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என ராதிகா மழுப்பு கிறாள்.

அதன் பிறகு ராதிகா, பாக்யாவிடம் உங்கள் வீட்டில் ஏதோ பிரச்சினை என சொல்லி வருத்தமாக இருந்தீர்கள் அல்லவா,அதை எல்லாம் சரியாகி விட்டதா எனக்கேட்க, ‘அது எல்லாம் சரியாகி விட்டதா, இல்லையா என எனக்கே புரியாமல் இருக்கிறது’ என்று பாக்யா கண்கலங்கி ராதிகாவிடம் செல்கிறாள்.

‘இனிமேல் உங்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது’ என ராதிகா கோபியை விட்டு நிரந்தரமாக செல்வதை மனதில் வைத்து பாக்யாவின் சந்தோசத்திற்கு வழி வகுக்கிறார். இதன்பிறகு மயூ மூலம் பாக்யாவிற்கு ராதிகா ஏன் இந்த ஊரை விட்டு போகிறார் என்ற விஷயம் தெரிந்ததும், அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பார்.

ஏற்கனவே கோபி யாருடன் தவறான தொடர்பில் இருக்கிறார் என்பதை ஓரளவில் கணித்து வைத்திருக்கும் பாக்யாவிற்கு ராதிகா தான் அந்த நபர் என தெரிந்ததும், 25 வருடமாக பிடிக்காமல்தான் தன்னுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதால் கோபியை ராதிகாவிற்கு பாக்யா விட்டுக்கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்