பிக் பாஸ் முன்பு கதறிக் கதறி அழுத பிரியங்கா.. நண்பனுக்கு வச்ச சரியான ஆப்பு!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. அப்பொழுது ஒவ்வொரு நபரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தகுதியான மூன்றுபேரை காரணத்துடன் நாமினேட் செய்ய வேண்டும். எனவே பிரியங்கா நாமினேட் செய்யப்படும் அறையில் கதரி கதரி பிக்பாஸ் முன்பு அழுதார்.

ஏனென்றால் தன்னுடைய நெருங்கிய நண்பனான நிரூப், கடந்த வாரம் பிரியங்காவை பயங்கரமாக வெறுப்பேற்றி விட்டார். அத்துடன் பிரியங்கா மற்றும் நிரூப் இருவருக்குமிடையே தற்போது விரிசல் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் பிரியங்காவால் நிரூப்பை நாமினேட் செய்யும்போது தன்னை அறியாமலேயே கண்ணீர் வடித்தார்.

இவ்வளவு நாள் பிக்பாஸ் வீட்டில் ஒருமுறைகூட நிரூப்பை நாமினேட் செய்யாத பிரியங்கா, ‘நிரூப் இந்த விளையாட்டை விளையாட தகுதியற்றவர்’ என்று கூறி பிக்பாஸ் வீட்டில் வெளியேற்ற வேண்டும் என்று இப்போது கூறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி நிரூப் பல இடத்தில் பிரியங்காவின் நட்பை உதாசீனப்படுத்தியது பிக்பாஸ் போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடுப்பேற்றியது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாசம் அன்பு என்ற பெயரில் போட்டியின் சுவாரசியத்தை குறைப்பது நல்லதல்ல என்று கமல் கடந்த வாரம் மட்டுமல்ல பல முறை பிரியங்காவிற்கு வார்னிங் கொடுத்துவிட்டார்.

எனவே இந்தமுறை அதை சரியாக புரிந்துகொண்ட பிரியங்கா தன்னுடைய ஆட்டத்தின் போக்கை மாற்றி உள்ளார். மேலும் பிரியங்கா அபிஷேக் வெளியேறிய பின்பு தெளிவாக விளையாட வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டு இனிமேலும் நண்பர்களிடம் வைக்கும் தேவையில்லாத பாசத்தை தூக்கி எரிய வேண்டும் என்றும் முடிவெடுத்துவிட்டார்.

ஆகையால் பிரியங்கா வரும் நாட்களில் தன்னுடைய தனித்துவமான விளையாட்டை பிக்பாஸ் நிகழ்ச்சியில் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருசில வாரத்தில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் நிகழ்ச்சி சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்