நடிகை படுத்தும் பாடு, பொன்னியின் செல்வன் 2 நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. ஆளை மாற்றும் மணிரத்தினம்

மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளியாகி உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா, த்ரிஷா போன்ற பல திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் சங்கமித்திருந்தனர்.

லைக்காவுடன் மணிரத்னம் கைகோர்த்து பொன்னியின் செல்வன் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தார். இந்நிலையில் முதல் பாகமே கிட்டத்தட்ட 500 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடியது. இது தவிர ஓடிடி, சேட்டிலைட் உரிமங்கள் பல கோடிக்கு விற்கப்பட்டது.

Also Read : பொன்னியின் செல்வன் போல் உருவாகும் கமலின் படம்.. கல்லா கட்ட திட்டம் தீட்டிய மணிரத்தினம்

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளை சேர்க்க மணிரத்தினம் விரும்பி உள்ளார்.

ஆகையால் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரமான வந்தயத்தேவனின் காட்சிகளை அதிகப்படுத்த மணிரத்தினம் விரும்பி கார்த்தியிடம் கேட்டுள்ளார். ஆனால் சர்தார் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி பல படங்களில் கமிட்டாகி உள்ளார்.

Also Read : இவர்கள் இல்லனா கல்லா கட்ட முடியாது.. அடுத்த 500 கோடி வசூலுக்கு சூழ்ச்சி செய்யும் மணிரத்தினம்

அதுமட்டுமின்றி மீண்டும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திற்காக தாடி எல்லாம் வளர்க்க முடியாது என்று கூறிவிட்டாராம். மேலும் மற்ற ஹீரோக்களான ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோரை அணுகிய போதும் இதே காரணத்தை சொல்லி நிராகரித்து விட்டார்கள்.

எனவே பொன்னியின் செல்வன் கதையின் மைய கருவான ஐஸ்வர்யாவின் நந்தினி கதாபாத்திரத்தை அதிக காட்சிகள் எடுக்க மணிரத்தினம் முடிவு செய்து உள்ளார். அதற்காக ஐஸ்வர்யா ராயை பாடாயப்படுத்தி மணிரத்தினம் ஒத்துக்கொள்ள வைத்துள்ளார். தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.

Also Read : மணிரத்னத்தை மிஞ்சும் அளவிற்கு கதையை செதுக்கி உள்ள லோகேஷ்.. தளபதி 67-ல் விஜய் செய்யப் போகும் சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்