106 நாட்களுக்கு பிக்பாஸில் நிரூப் வாங்கிய சம்பளம்.. இதுக்கு பேசாம பொட்டியவே எடுத்திருக்கலாம்

106 நாட்களை நிறைவு செய்துள்ள பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இருப்பினும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்ற தகவல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

ஏனென்றால் 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாப் 5 போட்டியாளராக இன்று வரை பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். எனவே இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் அளிக்கும் ஓட்டும் அடிப்படையில் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிந்துவிடும்.

அந்த வகையில் அதிக வாக்குகளைப் பெற்று ராஜு முதலிடத்தையும் பிரியங்கா இரண்டாவது இடத்தையும் பாவனி, அமீர் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில் கடைசி ஐந்தாவது இடத்தை நிரூப் பெற்று இன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட உள்ளார்.

எனவே இவர் பிக்பாஸ் வீட்டில் 16 வாரம் நிறைவு செய்ததால், ஒருவாரத்திற்கு ரூபாய் 70 ஆயிரம் சம்பளம் வாங்கிய நிரூப்புக்கு மொத்தம் ரூபாய் 11 லட்சத்து 20 ஆயிரத்து டன் வீடு திரும்பயுள்ளார். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக் பாஸ் ரூபாய் 12 லட்சத்தை அழித்து யார் வேண்டுமானாலும் அந்த போட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லலாம் என்ற வாய்ப்பை கொடுத்தார்.

அந்த வாய்ப்பை சிபி சாதுரியமாக பயன்படுத்திக்கொண்டு பண பெட்டியுடன் வெளியேறிவிட்டார். ஆனால் நிரூப் பைனல் லிஸ்ட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வெறிகொண்டு விளையாடி தற்போது பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் டாப் 5-வது இடத்தை பெற்றுள்ளார்.

இருப்பினும் அவர் ரூபாய் 12 லட்சத்தை எடுத்திருந்தால் அவருக்கு உபயோகமாய் இருந்திருக்கும். விதவிதமான ஸ்டேட்டஜி உடன் விளையாடிய இந்த சீசனின் வித்தியாசமான நபர் நிரூப்  என்ற பெயருடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்