பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெயிண்டர் ஆக மாறிய கதிர் ஜோடி.. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா!

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் கூட்டுக் குடும்பமாக சேர்ந்து வாழ்வதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில் மூர்த்தியின் இரண்டாவது தம்பி கதிர், மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

சில நாட்கள் ஹோட்டலில் வேலை பார்த்த கதிர், அந்த அனுபவத்தை வைத்து புதிதாக ஒரு ஹோட்டலை துவங்க திட்டமிட்டு அதற்காக ஒரு கடையை வாடகைக்கு எடுத்திருக்கிறார். கடைக்கு பெயிண்டர் அடிக்க வேண்டும் என்பதால் அந்த வேலைக்காக வெளியில் இருந்து ஆட்களை கூப்பிட்டால் செலவாகும் என்பதால் அந்த வேலையை கதிரே பார்க்கிறார்.

மளிகை கடையில் சொகுசாக இருந்த கதிர், மனைவி முல்லைக்காக பெயிண்டராக மாறிவிட்டார். இந்நிலையில் கதிருக்கு காபி கொண்டு வந்திருந்த முல்லை, தனியாக கஷ்டப்படும் கதிர் உடன் சேர்ந்து பெயிண்டர் அடிக்கிறார்.

அப்போது இவர்களுக்கு இடையே இருக்கும் ரொமான்ஸ் காட்சிகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்க்கும் ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. ஏனென்றால் முல்லை-கதிர் ரொமான்ஸ் மூலம்தான் இந்த சீரியல் பிரபலமானது.

தற்போது அதையே சீரியல் இயக்குனர் பயன்படுத்தி ரசிகர்களை ஈர்க்கிறார். மேலும் தனிக்குடித்தனம் போன இளம் ஜோடிகள் ஆன கதிர்-முல்லை இருவரிடையே இனிமேல் ரொமான்ஸ் தூக்கலாக இருப்பதுபோல் காட்டப் போகின்றனர்.

5 லட்சம் கடனை அடைப்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய கதிருக்கு ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா! இந்த நிலையில் ரொமான்ஸ் தேவையா? என வயித்தெரிச்சலில் நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்