அப்பாவுக்கு எதிராக திரும்பப் போகும் மகள்.. பாரதிகண்ணம்மா சீரியலின் அதிரடி திருப்பம்!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தன்னுடைய அப்பா பாரதி தான் என்பதை அறிந்து கொண்ட லட்சுமி முதல் முதலாக அம்மா அப்பா மற்றும் தங்கையுடன் பள்ளியில் அழைத்துச்சென்ற சுற்றுலாவிற்கு செல்கிறாள். அங்கு எதிர்பாராத விதமாய் லட்சுமி நீச்சல் குளத்தில் தவறி விழுந்ததும் பாரதி துடிதுடித்து காப்பாற்றுகிறான்.

இதனால் கண்ணம்மா பாரதிக்கு வரும் வழி எல்லாம் நன்றி சொல்கிறாள். ஏனென்றால் டூர் முடித்து வீடு திரும்ப அனைவரும் தயாரானபோது லட்சுமி உறங்கிவிட பாரதி, கண்ணம்மா மற்றும் லட்சுமி இருவரையும் அவர்களது வீட்டில் விட்டு விடுவதாக தன்னுடைய காரிலேயே அழைத்து வருகிறான்.

இவ்வாறு குடும்பமாக பாரதிகண்ணம்மா மற்றும் அவர்களது குழந்தையுடன் காரில் வரும்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா என்று ஒருவரை ஒருவர் ஏக்கத்துடன் பார்க்கின்றனர்.

அதுமட்டுமின்றி திருமணமான புதிதில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்றும் அவர்களை வெளியில் அழைத்துச் சென்று இரவு மனமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்ற கனவு தற்போது நடத்திக் கொண்டிருப்பதாக கண்ணம்மா பாரதியிடம் மனம் திறந்து பேசுகிறார்.

என்ன சந்தோசம் மட்டும் தான் மிஸ் ஆகுது என்று கண்ணம்மா புழுங்குகிறாள். இருப்பினும் பாரதிக்கு, கண்ணம்மாவின் மீது சந்தேகம் இல்லை என்றால் இரண்டு குழந்தைகளும் அவர்களது அப்பா அம்மா அரவணைப்பில் வளர்ந்திருக்கும்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் லட்சுமிக்கு அப்பா யார் என்பதை தெரிந்து கொண்டதால், அம்மாவிடம் ஹேமா தன்னுடைய தங்கையா? என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாள். இதன்பிறகு பாரதி தன்னை சந்தேகப்படுவதைப் பற்றி லட்சுமியிடம் கண்ணம்மா சொன்னாள் லட்சுமி பாரதிக்கு சரியான சவுக்கடி கொடுத்து கண்ணம்மாவின் தரப்பில் இருக்கும் நியாயத்தை நிலைநாட்டப் போகிறாள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்