சௌந்தர்யாவை மிஞ்சிய பேத்தி.. கண்ணம்மாவை நிற்கவைத்து விளாசிய மகள்!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு கண்ணம்மாவின் மகள் லஷ்மி தற்போது தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்காக லஷ்மி தன்னுடைய தோழியின் அம்மா போலீஸ் ஆக இருப்பதால், அவரை சந்தித்து தன்னுடைய அப்பாவை தேடித்தர சொல்கிறாள். அதற்கு அந்தப் போலீஸ் உன்னுடைய அப்பாவின் பெயர், முகவரி அல்லது போட்டோ ஏதாவது கொண்டு வா என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.

இதனால் லஷ்மி அம்மாவிடம் பிறப்புச் சான்றிதழை கேட்கிறாள். அதன் பிறகு 24 மணி நேரமும் அப்பாவைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் லஷ்மியை கண்ணம்மா திட்டுகிறாள். இதற்கு லட்சுமி என்னுடைய அப்பாவைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு முழு உரிமை இருக்கிறது.

கூடிய விரைவில் என்னுடைய அப்பா யார் என்பதை தெரிந்துகொண்டு உன் முன்பு நிற்க வைக்கிறேன் என தன்னுடைய அம்மாவிடம் சவால் விடுகிறாள். இப்படி லஷ்மி பேசுவது கண்ணம்மாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் சௌந்தர்யாவின் குணம் அப்படியே வெளிப்படுகிறது என ஆச்சரியத்துடன் பார்க்கிறாள்.

அதுமட்டுமன்றி கண்ணம்மா மற்றும் பாரதி இருவரையும் வெண்பா எப்படி பிடித்தார் என்ற உண்மையை தெரிந்துகொண்ட வில்லன் மாயாண்டி அதைச் சொல்லி வெண்பாவை மிரட்டுகிறாள். இதனால் மாயாண்டியை தீர்த்துக்கட்ட வேலைக்காரி சாந்தி மூலம் காய் நகர்த்துகிறார்.

ஆனால் அதையும் தெரிந்து கொண்ட மாயாண்டி வெண்பாவின் வில்லத்தனத்தை மிஞ்சி பாரதிகண்ணம்மா சீரியலில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறார். இவ்வாறு ஒருபுறம் லஷ்மி தன்னுடைய அப்பாவை தெரிந்துகொள்ள தீவிரமாக இருப்பதும், மற்றொரு புறம் வில்லி வெண்பாவை மிஞ்சும் அளவுக்கு மாயாண்டி செயல்படுவதும் பாரதிகண்ணம்மா சீரியலின் விறுவிறுப்பை கூட்டுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்