மூர்த்தியிடம் கையும் களவுமாக சிக்கிய கோபி.. மண்டை மேல இருக்க கொண்டைய மறந்துட்டீங்களே அங்கிள்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாரதிகண்ணம்மா தொடர் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது தாத்தாவின் பிறந்த நாளுக்காக பலரும் வந்து வாழ்த்துக்களையும், பரிசுகளையும் அளிக்கின்றனர்.

இந்நிலையில் ராதிகா வருவதைப் பார்த்துவிட்டு கோபி செழியனை மாடிக்கு அழைத்துச் செல்கிறார். எனக்கு அர்ஜெண்டா மீட்டிங் இருக்கு, யாரும் இத சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்க என சொல்லிவிட்டு நீ சமாளிச்சுக்கோ என ரூமுக்குள் செல்கிறார்.

ராதிகா, பாக்யாவின் கணவனை பார்த்து விட்டு தான் செல்ல வேண்டும் எனக் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபி ரூமை விட்டு வெளியே வர மறுக்கிறார். இதனால் சிறிது நேரம் பார்த்துவிட்டு ராதிகா இன்னொரு நாள் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள்.

ராதிகா காரில் ஏறுவதை பால்கனியில் இருந்த கோபி பார்த்துவிட்டு சந்தோஷத்தில் குத்தாட்டம் போடுகிறார். உடனே வேறு ஒரு சட்டையை போட்டுவிட்டு கீழே இறங்கி பாக்கியாவிடம் என்னோட ஃபிரண்டு வந்து இருக்காங்கன்னு சொன்னியே எங்க என ஒன்னும் தெரியாத பிள்ளை போல கேட்கிறார்.

அவங்க கொஞ்ச நேரம் பாத்துட்டு போயிட்டாங்க என்ன பாக்யா கூறுகிறார். அதன்பிறகு எழிலிடம் பால் வாங்கி வரச் சொல்கிறார். ஆனால் கோபி நான் பால் வாங்கிட்டு வரேன் என்று சொல்ல எல்லாரும் ஆச்சரியம் அடைகிறார்கள். ஏனென்றால் கோபி இதுவரைக்கும் கடை பக்கமே போனதில்லை.

மேலும் கோபி முகத்தில் இருக்கும் உற்சாகத்தை பார்த்து எல்லோரும் குழப்பத்திலேயே உள்ளனர். இந்நிலையில் ராதிகாவுக்கு கோபி போன் செய்து டீச்சர் வீட்டுக்கு அருகில் தான் இருக்கிறேன் உடனே வா என கூறுகிறார். உனக்காக தான் டீச்சர் வீட்டுக்கு போகணும்னு கிளம்பி வந்தேன் என கூறுகிறார்.

இவ்வாறு கோபி, ராதிகா, மயூ முவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது எதர்ச்சையாக போன் பேச வந்த மூர்த்தி இவர்களை பார்த்து விடுகிறார். ராதிகா உடன் தான் கோபி பழகுகிறார் என்ற உண்மை தெரிந்த மூர்த்தி பாக்யா குடும்பத்திடம் உண்மையை சொல்வாரே என்பதை வரும் வாரங்களில் தெரியவரும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்