வத்திக்குச்சி வனிதாவை விட இவர் என்ன பிஸ்தா.. பிக்பாஸ் அல்டிமேட்டில் நடக்கும் பித்தலாட்டம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டோரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளது. எனவே ஒவ்வொரு வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் எலிமினேஷன் நடைபெறும்.

அப்படி நேற்றைய தினத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து முதல் நபராக சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கொளுத்திப் போடும் வேலையை சரியாக பார்த்து நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் நபராக இருப்பதால் அவர் வெளியேறியது பிக்பாஸ் ரசிகர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் வம்பை இழுத்து வழியில் போட்டுக்கொண்டிருக்கும் வத்திக்குச்சி வனிதா விஜயகுமாரை விட அபிநய் அதிக வாக்குகளைப் பெற்று சேவ் ஆகி உள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெமினிகணேசன்-சாவித்ரி அவர்களின் பேரன் அபிநய் அந்த சீசனிலும் தற்போது கலந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் வெறும் செட் பிராப்பர்ட்டி ஆக மட்டுமே இருந்து கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்கும்போது இவருக்கு யார் தான் ஓட்டு போட்டு காப்பாற்றுகின்றனர் என பிக்பாஸ் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அத்துடன் வெளியான ஓட்டிங் லிஸ்டின் அடிப்படையில் கடைசி இடத்தைப் பிடித்த அபிநய் இந்த வாரம் எலிமினேட் ஆவார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென்று ஓட்டிங் லிஸ்டில் குளறுபடி ஏற்பட்டு அபிநய் எஸ்கேப் ஆகி தாத்தா எலிமினேட் ஆகிவிட்டார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பித்தலாட்டம் நடத்துவதாகவும் சமூக வலைதளங்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்