என்ன டம்மியா மாத்திட்டாங்க.. பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து கிளம்பிய அடுத்த நடிகை!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகி ரோஷினியை தொடர்ந்து அகிலன் போன்ற கதாப்பாத்திரங்கள் விலகியது. அவர்களுக்கு பதில் வேறு நடிகர் நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தொடக்கத்தில் ஏற்க மறுத்த ரசிகர்கள் மெல்ல மெல்ல ஏற்றுக்கொண்டனர். இன்னிலையில் சீரியலின் தொடக்கத்திலிருந்தே அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் கண்மணி மனோகரன் இந்த சீரியலில் விலக உள்ளார். இவருக்கு பதில் அருள்ஜோதி என்ற சீரியல் நடிகை இனி வரும் நாட்களில் நடிக்கப்போகிறார்.

ஆரம்பத்தில் அஞ்சலி பாரதியை காதலித்து வில்லியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதன் பிறகு மனம் மாறி நல்லவராக கண்ணம்மாவிற்கு ஆதரவாக இருக்கும் கேரக்டர் ஆனபோது அஞ்சலியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை. எனவே வில்லியான அஞ்சலி கேரக்டர் பாரதிகண்ணம்மா சீரியலில் டம்மி ஆனது.

அத்துடன் கண்மணி, பாரதிகண்ணம்மா சீரியலில் விலகுவதற்கு முக்கிய காரணமாக அவர் ஜீ தமிழில் துவங்கவிருக்கும் ‘அமுதாவும்..?’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க கமிட்டான தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் புத்தம் புது சீரியலில் கண்மணி தாவணி பாவடையில் டீச்சராக நடிக்க இருக்கிறார்.

அதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி, சீரியலின் டைட்டிலை முழுமையாக வெளிப்படுத்தாமல் ரசிகர்களை சிந்திக்க வைத்திருக்கின்றனர். கண்மணிக்கு ஜோடியாக இந்த சீரியலில் கதாநாயகனாக அருண் பத்மநாபன் நடிக்கவிருக்கிறார்.

இவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான மாங்கல்ய தோஷம் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். இவ்வாறு கண்மணி பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகி ஜீ தமிழில் கதாநாயகியாக நடக்க இருப்பதால் சோசியல் மீடியாவில் அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்