அந்த குழந்தை அளவுக்கு கூட உனக்கு அறிவு இல்ல பாரதி.. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பத்து வருடங்களாக மனைவியையும் மகளையும் விட்டு பிரிந்து வாழும் டாக்டர் பாரதிக்கு, ஹேமா கண்ணம்மாவின் மகள் என்ற விஷயம் தெரிந்தது. அதுமட்டுமின்றி கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமியும் பாரதிதான் அப்பா என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார்.

இதை பாரதியிடமே லஷ்மி வெளிப்படுத்துகிறார். ஒருவேளை ஹேமாவிடம் லட்சுமி இந்த உண்மையை சொல்லி விடுவார் என்ற பதட்டத்திலும், ஹேமாவை கண்ணம்மா தன்னிடமிருந்து பிரித்து விடுவார் என்ற பயத்திலும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே ஹேமாவை பாரதி வைத்திருக்கிறார்.

ஹேமா இல்லாமல் பள்ளிக்கு போக பிடிக்காதலட்சுமி, அவளது வீட்டிற்கு வந்து சந்தித்து பேசுவதுடன் பாரதிக்கு போன் செய்து பேசுகிறார். ‘ஹேமாவிடம் பாரதிதான் தன்னுடைய அப்பா என்ற உண்மையை சொல்ல மாட்டேன்’ என்று லட்சுமி தொலைபேசியின் மூலம் பாரதிக்கு உறுதியளிக்கிறார்.

அந்த சமயம் பாரதி லட்சுமியிடம் பதில் எதுவும் பேசாமல் கூனிக்குறுகுகிறார். மறுபக்கம் கண்ணம்மாவின் மீது கடும் கோபத்தில் அவரை அழைத்து ஹாஸ்பிட்டல் என்று கூட பார்க்காமல் திட்டி தீர்க்கிறார்.

லட்சுமியின் மூலம் பிரச்சினையை உருவாக்குகிறாயா என்றும் கண்ணம்மா மீது பழிபோடும் பாரதி, டாக்டராக இருந்து கொண்டு ஒரு டிஎன்ஏ டெஸ்ட் மூலம் கண்ணம்மாவின் இரண்டு பிள்ளைகளுக்கும் தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதைச் செய்யாமல் கண்ணம்மாவின் மீது சந்தேகப்பட்டு, அந்த இரண்டு பிஞ்சுக் குழந்தைகளையும் வதைப்பது சீரியல் ரசிகர்களை எரிச்சலடையச் செய்கிறது. கதை இல்லாமல் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் இந்த சீரியல் இயக்குனரை நெட்டிசன்கள் கிழித்து தொங்க விடுகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்