ராதிகாவை நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட பாக்கியா.. புருஷனைவிட உன்ன ரொம்ப நம்பிட்டேன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏனென்றால் தற்போது கோபி ராதிகாவுடன் பழகி வருவது பாக்யலட்சுமி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததால் தற்போது பாக்கிய வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். முதலில் இனியா வந்து பாக்கியாவை அழைத்த போதும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்.

அதன்பின்பு ஈஸ்வரி தனது மருமகளை கண்டிப்பாக அழைத்து வருவேன் என்று சொல்லிவிட்டு பாக்கியாவை வீட்டுக்கு வர வற்புறுத்துகிறார். ஆனால் பாக்கியா தனது முடிவில் உறுதியாக இருந்ததால் தனது மாமியார் கூப்பிட்டும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார். இதனால் ஈஸ்வரிக்கு பாக்கியா மீது சற்று கோபம் இருந்தாலும் இதற்கெல்லாம் காரணம் கோபி தான் என அவர் மீது வெறுப்பை காட்டுகிறார்.

இந்நிலையில் செல்வியை அழைத்துக்கொண்டு பாக்கியா ராதிகா வீட்டுக்கு செல்கிறார். முதலில் எப்போதும் போல பாக்கியாவை வீட்டுக்கு அழைத்து பேசுகிறார் ராதிகா. ஆனால் கடும் கோபத்தில் இருக்கும் பாக்யா சரமாரியான கேள்விகளால் ராதிகாவை அதிர வைக்கிறார்.

எத்தனையோ தடவை இனியா அப்பா மேல சந்தேகம் வந்து இருக்கு, ஆனா ஒரு தடவை கூட உங்களையும் அவரையும் சேர்த்து வச்சு பார்த்தது இல்லை என பாக்கியா கூறுகிறார். மேலும் அவர் பண்ணது துரோகம் என்றால் நீங்க பண்ணது என்ன என்று பாக்யா கேட்கிறார். பதில் சொல்ல முடியாமல் ராதிகா அழுகிறார்.

மேலும் உங்களுடைய கணவர் தான் கோபி என்பது தனக்கு தெரியாது என்று ராதிகா கூறுகிறார். ஆனால் பாக்யா தன்னுடைய ஆதங்கத்தை எல்லாமே ராதிகாவிடம் கொட்டி தீர்க்கிறார். இதனால் ராதிகா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தற்போது ஊரை விட்டு போகலாம் என முடிவெடுத்து இருக்கும் ராதிகா ஒருவேளை பாக்கியா திட்டியது எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு கோபி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற என்னமும் வரக்கூடும். இதனால் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாக்யலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்