ஒரு டிஷ்ல் கோட்டவிட்ட பாக்யா.. கடைசி நேரத்தில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்!

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் தற்போது பாக்யா 100 வகையான சமையல் செய்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் கோபி அதெல்லாம் உன்னால் செய்ய முடியாது என மட்டம் தட்டி பேசுகிறார்.

ஆனால் எழிலின் உதவியுடன் இதை கண்டிப்பாக முடித்தே ஆகவேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார் பாக்யா. அனைத்து ஊடகங்களையும் அழைத்து, பாக்யா சமையல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மேலும் இது தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது.

அதை பார்த்த ராதிகா இவ்ளோ நேரம் ஆகியும் இன்னும் பாதி கூட சமைக்கல என கோபியிடம் கூறுகிறார். மேலும் பாக்கியாவின் அருகிலுள்ள ஜெனி இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சீக்கிரம் செய்யுங்க என உத்வேகம் கொடுக்கிறார். ஒரு வழியாக ஒரு மணி நேரத்திற்குள் பாக்கியா சமைத்து முடித்து விடுகிறார்.

எல்லோரும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால் கின்னஸ் ஆய்வாளர்கள் 99 வகையான சாப்பாடுகள் மட்டுமே உள்ளது, ஒன்று குறைகிறது என கூறுகிறார்கள். எல்லோரும் அதிர்ச்சியாக உள்ளபோது பாக்யா ஒரு நிமிஷம் இருங்கள் என்று சொல்லிவிட்டு ஊறுகாய் இங்கே இருக்கிறது என எடுத்து வருகிறார். மேலும் ஒரு மணி நேரத்தில் 100 வகையான சமையல் செய்து அசத்தியுள்ளார் பாக்கியா.

உடனே ஊடகங்கள் பாக்யாவை நோக்கி பேட்டி எடுக்க வருகிறது. ஆனால் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் பாக்யா. அதாவது குழந்தைகளுக்கு நான் செய்த சாப்பாடு தப்புன்னு சொன்னப்ப வந்த நீங்க, என் மேல தப்பு இல்லைன்னு சொன்னப்ப ஏன் நீங்க வரல என கேட்கிறார்.

மேலும் அது உங்களுக்கு ஒருநாள் நியூஸ், ஆனால் அதுதான் எங்க வாழ்க்கை என பாக்யா சரியான பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதைக்கேட்ட பேட்டியாளர் பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்டார். உடனே கலக்கிட்ட அம்மா என எழில் பாக்கியாவை கட்டி அணைக்கிறார். இந்நிலையில் பாக்யா திரும்ப தனது தொழிலை வெற்றிகரமாக நடத்துவார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்