நீங்க இல்லனா உயிரோடு இருக்க மாட்டேன்.. பாக்யாவின் தலையில் இடியை இறக்கிய கோபி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மகா சங்கமத்திற்கு பிறகு ரசிகர்கள் இவ்வளவு நாள் என்ன என்னவற்றையெல்லாம் எதிர்பார்த்தாற்களோ, அவை அனைத்தும் ஒவ்வொன்றாக சீரியலில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகுவதால் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிலும் குடிபோதையில் கோபி, ராதிகா வீட்டிற்கு சென்று பாக்யா தான் தன்னுடைய மனைவி என்பதை புகைப்பட ஆதாரத்துடன் காண்பித்து ராதிகாவை நிலை குலைய வைத்திருக்கிறான். இவ்வளவு நாள் ராதிகா கோபியின் மனைவி பணத்தாசை பிடித்தவள் என நம்பிக் கொண்டிருந்தாள்.

ஆனால் பாக்யாவைப்பற்றி ராதிகாவிற்கு ஏற்கனவே தெரியும் என்பதால் கோபிதான் பொய் பித்தலாட்டம் செய்து தன்னை ஏமாற்றி இருக்கிறான் என புரிந்து கொண்டு அவனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தினாள். அதன்பிறகு அங்கிருந்து கிளம்பிய கோபி நிறை போதையில் வீடு வந்து சேருகிறான். தள்ளாடி வரும் கோபியை, எழில் மற்றும் பாக்யா இருவரும் ரூமிற்கு அழைத்துச் சென்று படுக்க வைக்கின்றனர்.

போதையில் என்ன பேசுகிறோம் என தெரியாத கோபி, ராதிகா மற்றும் மயூ இருவரையும் விட்டுப் பிரிய முடியாது என்றும், அவர்களுக்காக மொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வருகிறேன் என்றும் உளறுகிறான். ‘நீங்கள் இரண்டு பேரும் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நீங்கள் இருவரும் தான் எனக்கு முக்கியம், பாக்யாவை எனக்கு கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. நீங்கள் இல்லாமல் நான் செத்து விடுவேன்’ என்றெல்லாம் பேசுகிறான்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் பாக்யா தலையில் இடி விழுந்தது போல் நொறுங்கிப் போய் விட்டாள். மேலும் பாக்யாவிற்கு கோபி ஏதோ ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் இருந்த நிலையில், அது தற்போது 2 நபரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஆனால் கோபி, ‘ராதிகா, மயூ என்ற கணக்கில் இருவரையும் விட்டு பிரிய முடியாது’ எனக் கூறியிருக்கிறார். இதை பாக்யா இரண்டு பேருடன் தொடர்பில் இருக்கிறாரா என்று குழம்பு தவிக்கிறாள். இப்படி பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் இதுவரை எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் அனைத்தும் கதையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்