இவ்வளவு நாள் முட்டாளாய் இருந்துட்டனே.. எரிமலையாய் வெடித்து பாக்யா எடுத்த முடிவு!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் 25 வருடங்களாக கூட வாழ்ந்த கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த பாக்யா பொறுமையை இழந்து எரிமலையாய் வெடித்திருக்கிறார். இவருடைய இந்த மாற்றத்தை சீரியல் ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

அந்த அளவிற்கு தன்னுடைய கணவனை வெளுத்து வாங்குவது இந்த சீரியலை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. அத்துடன் கோபி, ராதிகாவுடன் தான் தொடர்பில் இருக்கிறார் என்று விஷயத்தை பாக்யா சொன்னதும், கோபியின் அம்மா ராதிகாவை தவறானவர் என சித்தரித்ததால் அதை மறுத்த பாக்யா, கோபிதான் மகாநடிகன் என்று கோபியின் முகத்திரையைக் கிழிக்கிறார்.

அதுமட்டுமின்றி பாக்யாவின் பாசத்தை பகடை ஆக பயன்படுத்தி விவாகரத்து பெற கோர்ட்டுக்கு வரை அழைத்துச் சென்று முட்டாளாக்கி இருப்பதை நினைத்து பாக்யா தற்போது வருந்துகிறார். இவ்வளவு முட்டாளாகவும் பைத்தியம் ஆகவும் கோபி சொல்வதை எல்லாம் 25 வருடங்களாக நம்பிய முட்டாள் தனத்தை நினைத்து நொறுங்கிப் போயிருக்கிறார்.

மேலும் தனக்கு நிகழ்ந்த அநீதிகளை கண்டு வெகுண்டெழுந்த பாக்யா, இனிமேல் கோபியுடன் வாழமுடியாது என்று வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதுமட்டுமின்றி இனி கோபிக்கு பிடித்தாற்போல் அவருடைய வாழ்க்கையை சந்தோசமாக வாழும்படி வாழ்த்தி அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இதனால் பதறிப்போன குடும்பம் அவரைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. இருப்பினும் பாக்யா கோபியுடன் ஒரு நிமிடம் கூட இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்பதில் ஆணித்தரமாக இருக்கிறார். வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவிற்கு கோபி தான் காரணம் என்பதால் தன்னுடைய குடும்பத்தினரிடம் முகத்தைக் காட்ட முடியாமல் கோபி கூனிக்குறுகுகிறார்

மறுபுறம் ராதிகாவின் அம்மா ராதிகாவிடம் கோபியை விட்டு பிரியதான் போகிறாயா என கேட்க, அதற்கு ராதிகா அமைதியாக இருக்கிறார். இதன்மூலம் ராதிகா கோபியின் மீது இருக்கும் கோபம் தணிந்தது என்பதைக் காட்டுகிறது. இதன் பிறகு பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு கோபியை ராதிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்