கோபிக்கு பெரிய ஆப்பு வச்ச தந்தை.. அதிர்ச்சியடைந்த பாக்கியலட்சுமி!

விஜய் டிவியின் டாப் சீரியல்களை ஒன்றான பாக்கியலட்சுமி தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் கல்லூரி காதலியுடன் தொடர்பில் இருக்கும் கோபியை பற்றி அவருடைய அப்பாவிற்கு தெரியவர அது பெரும் பூகம்பமாக வெடித்தது.

அதன்பிறகு சூட்டோடு சூடாக சொந்த ஊருக்கு சென்ற கோபியின் தந்தை சத்தியமூர்த்தி தன்னுடைய பூர்வீக சொத்துக்களை கோபிக்கு கொடுக்கக் கூடாது என்பதில் ஆணித்தரமாக உயில் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் சத்தியமூர்த்தியின் சொத்துக்கள் அனைத்தும் பாக்கியலட்சுமி மற்றும் பாக்கியலட்சுமி பிள்ளைகளுக்கு சேரும் என்று எழுதிவிட்டார். எனவே சத்தியமூர்த்தியின் இந்த அதிரடி முடிவை வீட்டில் தெரிவித்தவுடன் பாக்கியலட்சுமி குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

அத்துடன் வீட்டில் இருப்பவர்கள் இந்த திடீர் முடிவுக்கு என்ன? என்று கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டனர். சத்தியமூர்த்தியின் மனைவி அப்பாவின் சொத்து மகனுக்கு தானே ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என்று திட்டினார்.

ஆனால் கோபியின் தந்தையால் காரணத்தை சொல்ல முடியாமல் முகத்தில் தன்னுடைய கோபத்தை மட்டும் காட்டினார். ஆனால் கோபி இதற்கு சற்றும் அசரவில்லை.

அந்த அளவிற்கு காதல் கண்ணை கட்டி போட்டு இருக்கிறது. பணமா! காதலா! என்று கோபியிடம் கேட்டால் கோபி நிச்சயம் ராதிகாவின் காதல்தான் என்று முடிவெடுத்து விடுவார். அந்தளவிற்கு ராதிகாவின் மீது பைத்தியமாக கொண்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்