விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலின் வில்லியான அர்ச்சனா, தன்னுடைய மாமியாரின் சேலையைக் கிழித்து, அந்தப் பழியை சந்தியாவின் மீது போட்டு திட்டுவாங்க விடுகிறார். அதுமட்டுமின்றி சந்தியா செய்த சமையலில் உப்பை அள்ளி கொட்டி அதை வீட்டில் இருப்பவர்களை சாப்பிட விடாமல் கேவலமான செயலை செய்து கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் அர்ச்சனா மட்டுமே செய்ய முடியும் என்று சந்தியா யூகித்து, அர்ச்சனாவிடம் இதைப்பற்றி கேட்கிறார். அப்போது அர்ச்சனா, ‘ஆமா அப்படி தான் செய்வேன். இதுவரை எவ்வளவோ பண்ணிட்டேன். அதனால் என்ன ஆகும் என்பதையும் பார்த்து விட்டேன்.
இனிமேல் என்ன புதுசா நடந்து விடப்போகிறது அதையும் பார்க்கலாம். இனி இந்த வீட்டை விட்டு ஒருத்தி போகிறார் என்றால் அது நீதான். அதற்கான வேலையை மட்டுமே இனி பார்க்கப் போகிறேன். மகுடிக்கு ஆடுகிற பாம்பு நான் இல்லை’ என்று திமிரும் தெனாவெட்டும் கலந்தா பேச்சில் அர்ச்சனா சந்தியாவை ஒரு உருட்டு உருட்டுகிறார்.
சந்தியாவும் அர்ச்சனா பேசுவதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு நிற்பது சீரியலை பார்க்கும் ரசிகர்களை வெறி ஏற்றுகிறது வெளியேற்றுகிறது. மேலும் அர்ச்சனா தன்னை அசிங்கப்படுத்திய சந்தியாவை வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்றும், பார்வதியை பழிவாங்கத் துடிக்கும் விக்கியை தூண்டிவிட்டு பாஸ்கர்-பார்வதி கல்யாணத்தை நிறுத்த திட்டமிடுகிறாள்.
அதன்பின்பு பாஸ்கருக்கும், தன்னுடைய தங்கை ப்ரியாவிற்கு திருமணத்தை நடத்த திட்டமிட்டு பல்வேறு சதி வேலைகளை இனி வரும் நாட்களில் செய்யப்போகிறாள். இதெல்லாம் ஐபிஎஸ் மூளையை பயன்படுத்தி சந்தியா எப்படி சமாளிக்கப் போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
கதாநாயகியாக நடித்துள்ள சந்தியாவின் நடிப்பை விட வில்லி அர்ச்சனாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. உண்மை, நியாயம் என்று சந்தியா ஓவர் சீன் போடுவது போன்று ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.