கணவர் வீட்டில் அனுபவித்த கொடுமை.. 2வது திருமணம் செய்ய நடுங்கும் சீரியல் நடிகை

சினிமா மற்றும் சீரியலில் நடிப்பதால் சில நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நிலவி வருகிறது. அதாவது மற்ற நடிகர்களுடன் நெருக்கமாக நடிப்பது அந்த நடிகைகளின் கணவருக்கு பிடிக்காமல் உள்ளது. இதனால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர்.

அவ்வாறு முதல் திருமண வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளை ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார் சீரியல் நடிகை. அதுமட்டுமல்லாமல் அந்த நரகத்தில் இருந்து தப்பித்த பிறகு மீண்டும் திருமணம் செய்யவே பயமாக இருப்பதாக அந்த நடிகை கூறியுள்ளார்.

அதாவது விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தவர் நடிகை மகேஸ்வரி. தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மகேஸ்வரி, திருமணமான ஒரு வருடத்திலேயே தனது கணவரை விட்டுப் பிரிந்ததாக கூறியிருந்தார். அதாவது அவரது கணவர் மற்றும் கணவரின் உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார்.

சீரியலில் நடித்தால் குடும்ப மானம் போய்விடும் என கூறி உள்ளனர். அதனால் சில காலம் தொகுப்பாளினி ஆகவே வேலை பார்த்ததாக மகேஸ்வரி கூறியிருந்தார். மேலும் தனது அம்மாவுக்கு சில உதவிகள் செய்வதையும் மறுத்துவிட்டனர். இதனால் எங்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் முற்றி மனக்கசப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் அவரை பிரிந்து கிட்டதட்ட பத்து வருடங்கள் எனது பெற்றோர் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருவதாக கூறினார். இந்நிலையில் இரண்டாம் திருமணம் என்று யோசித்தால், அந்த நபரும் முதல் கணவர் போல் இருந்தால் என்ன செய்வது என்ற சிந்தனைதான் வருகிறது. இதனால் இரண்டாம் திருமணத்தில் எனக்கு ஈடுபாடில்லை, மகனை வளர்ப்பதில் தான் என் கவனம் உள்ளது என்ற மகேஸ்வரி கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்