5 வயது மகளை சினிமாவில் களமிறக்கும் விஷால் பட நடிகை.. அவரே வெளியிட்ட புகைப்படம்

தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் வெற்றிப்படமாக அமைந்தாலும் அதன் பின்னர் சினிமாவை விட்டு காணாமல் போன நடிகைகள் ஏராளம். அந்த வகையில் முக்கியமானவர் நடிகை பானு. இவர் தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து பானு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதே போல் இவருக்கும் சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்னும் படத்தில் காமெடி நடிகர் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன் பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல் ஒன்றிலும் களமிறங்கினார். தற்போது மலையாள சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை பானுவிற்கு திருமணமாகி கியாரா என்கிற ஐந்து வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் அம்மாவின் வழியை பின்பற்றி மகளும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகும் பத்தாம் வளவு என்கிற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார் கியாரா.

actress-muktha
actress-muktha

இந்த தகவலை நடிகை பானு அவரது சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியுள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கி வரும் நடிகை மீனாவின் மகள் நைனிகா மற்றும் நடிகர் கொட்டச்சியின் மகள் மானஸ்வி வரிசையில் பானுவின் மகள் கியாராவும் விரைவில் இடம்பிடிப்பார் என எதிர்பாக்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்