விக்ரம் மகன் போட்ட அன்பு கட்டளை! வேறுவழி இல்லாமல் சீயான் எடுத்த துணிச்சலான முடிவு

தமிழ் சினிமாவில் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலமே ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் விக்ரம். இதனாலேயே அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து மகான் படத்தில் நடித்து உள்ளார்கள். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா போன்ற பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் விக்ரம் தன் மகனுடன் நடித்திருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் துருவ் கேட்டதற்காக விக்ரம் வில்லனாக நடித்துள்ளார். இதுவரையில் எந்த படத்திலும் ஹீரோவுக்கு வில்லனாக நடிக்காத விக்ரம் தன் மகனுக்காக மகான் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

தற்போதும் விக்ரம் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தன் மகன் துருவ் விக்ரம் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்கு விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர் மத்தியில் வரவேற்க செய்கிறது.

மகான் படம் ஜனவரி 26 ரிலீசாக உள்ளது. கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்