சிம்பு, கௌதம் மேனன் படத்தில் இணைந்த வெற்றிமாறன் பட பிரபலம்.. அட்ரா சக்க!

மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு அடுத்ததாக பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கௌதம் மேனனுடன் இணைய உள்ள செய்தி சிம்பு ரசிகர்கள் கொண்டாட வைத்தது. அந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தை சமீபகாலமாக வெற்றிகரமான படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக சிம்புவை சந்தித்து அட்வான்ஸ் கொடுத்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமீபகாலமாக கௌதம் மேனன் எடுக்கும் எந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. தனுஷை வைத்து எடுத்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் அவரது கேரியரை மொத்தமாக காலி செய்துவிட்டது.

இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என வெற்றிமாறன் பட பிரபலம் ஒருவரை தன்னுடைய படத்தில் கொண்டுவந்து பலத்தை சேர்த்துள்ளாராம். அவர் வேறு யாரும் இல்லை.

எழுத்தாளர் ஜெயமோகன் தான். இவர் எழுதிய சிறுகதையிலிருந்து தான் தற்போது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் தன்னுடைய படத்தில் வசனகர்த்தாவாக இவரை சேர்த்துள்ளார் கௌதம் மேனன்.

இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. நதிகளில் நீராடும் சூரியனே படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

nadhigalile neeradum sooriyan-cinemapettai
nadhigalile neeradum sooriyan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்