கோபியை பற்றி ராதிகாவிற்கு தெரிய வந்த உண்மை.. மகனின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், போராட்டமே வாழ்க்கை என்பதின் உச்சகட்டமாக பாக்யாவிற்கு ஒவ்வொரு பிரச்சினையாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கோபி மற்றும் பாக்யாவின் மாமியார் இருவரும் பாக்யா முயற்சி பண்ணும் ஒவ்வொரு விஷயத்திலும் தோற்றுப் போய் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் இதையெல்லாம் முறியடித்து தொடர் வெற்றி அடைந்து வருகிறார். இதற்கு இடையில் பாக்யாவின் மகன்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கிறது. அதாவது செழியன் செய்த தவறால் ஜெனி பிரிந்து போய் அம்மா வீட்டில் இருக்கிறார். எப்படியாவது ஜெனி மறுபடியும் தனுடன் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளையும் செழியன் கடந்து வருகிறார்.

அந்த நேரத்தில் செழியினிடம் பேசுவதற்காக ஜெனி அப்பா வருகிறார். இதை தெரிந்து கொண்ட மாலினி மறுபடியும் செழியன் வாழ்க்கையில் பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக ஜெனி அப்பாவிடம் வாய்க்கு வந்தபடி உளறி பல பொய்களை சொல்லிவிட்டார். இதுதான் உண்மை என்று நம்பிய ஜெனி அப்பா இனி செழியன் உனக்கு வேண்டாம் என்று ஜெனிடம் சொல்லிவிடுகிறார்.

Also read: டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை கெட்டியாக பிடித்த சீரியல்கள்.. சன் டிவியை முந்த முடியாமல் தோற்றுப்போன சேனல்

இந்த பிரச்சினையை எப்படியாவது சரி கட்ட வேண்டும் என்று பாக்யா, மாலினியை கூப்பிட்டு எச்சரிக்கை கொடுத்து கோபமாக திட்டி விடுகிறார். அடுத்தபடியாக ஜெனி வீட்டிற்கு சென்று நடந்த உண்மையையும் மாலினியின் கெட்ட எண்ணத்தையும் பற்றி விளக்குகிறார். இதை சரியாக புரிந்து கொண்டு ஜெனி மறுபடியும் செழியுடன் வாழ்வாரா என்பதுதான் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

அடுத்தபடியாக எழில் மனைவி அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் அவ்வப்போது பாக்கியாவிடம் வந்து பிளாக் மெயில் பண்ணுகிறார். அதாவது எப்படியாவது அமிர்தா மற்றும் நிலா பாப்பா என்னுடன் சேர்த்து விடுங்கள் என்று பைத்தியக்காரன் போல் உளறுகிறார். இதை எப்படி சமாளிப்பது குடும்பத்தில் இருப்பவர்களிடம் சொல்லி இதுக்கு என்ன முடிவு எடுக்கலாம் என்ற குழப்பத்தில் பாக்கியா பரிதவித்து வருகிறார்.

ஆனால் இந்த உண்மையை பாக்கியா சொன்னால் கண்டிப்பாக அமிர்தாவுக்கு மிகப்பெரிய ஷாக்காக இருக்கும். அதே நேரத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் எழிலை விட்டு பிரிய மாட்டார். அத்துடன் நிலா பாப்பாவும் அப்பா என்று மனதார நினைப்பது எழிலை மட்டும்தான். அடுத்தபடியாக கோபி பேங்கில் கடன் வாங்கி அடைக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்கிற உண்மை தற்போது ராதிகாவிற்கு தெரிய வருகிறது. இதற்கு அடுத்து ராதிகா எடுக்க போகும் முடிவு தான் கோபி வாழ்க்கையை தலைகீழாக மாற்றப் போகிறது.

Also read: பொறுத்தது போதும் பொங்கி எழுந்த குணசேகரனின் தங்கை.. எஸ்கேஆர் வீட்டில் தஞ்சம் அடைந்த ஆதிரை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்