சூர்யா படத்தில் இணைந்த தளபதி பட இயக்குனர் மற்றும் நடிகர்.. எதற்கும் துணிந்தவன் லேட்டஸ்ட் அப்டேட்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 51 நாட்களாக காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினர் சமீபத்தில் சென்னை திரும்பினார்.

இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் இணைந்து உள்ளனர். அவர்களில் ஒருவர் தளபதி விஜய் நடித்த படத்தின் இயக்குனர். மற்றொருவர் விஜய் படத்தில் நடித்த இளம் நடிகர். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

அவர்கள் வேறு யாருமல்ல கடந்த 2003ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தை இயக்கிய இயக்குனர் கே.பி.ஜெகன் தான். இப்படத்தை தொடர்ந்து கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் உள்ளிட்ட ஒரு படங்களை இயக்கிய ஜெகன் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளார்.

Saran Sakthi’s next projects

அதேபோல் ஜில்லா, வடசென்னை, நெற்றிக்கண், சகா உள்ளிட்ட படங்களில் நடித்த சரண் சக்தி, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இப்படத்தில் சரண் சக்தி முதன்மையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகருக்கு சரண் சக்தி வில்லனா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏற்கனவே படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் கே.பி.ஜெகன் மற்றும் இளம் நடிகர் சரண் சக்தி ஆகியோர் எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளது இப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்