3 வருடத்திற்கு முன்பே சூர்யாவுக்கு கதை சொன்ன பா ரஞ்சித்.. பிடித்திருந்தாலும் நடிக்க மறுத்த காரணம் இதுதான்!

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய தனித்துவக் நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் சூர்யா. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இதனால் சூர்யாவின் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகின்றன. ஆனால் கடந்த சில வருடங்களில் சூர்யாவின் படங்கள் பெரிய அளவு தெலுங்கு சினிமாவில் சோபிக்கவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றாக உள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு சூரரைப்போற்று படத்தின் மூலம் வெற்றியை பெற்றுள்ள சூர்யா அதை தக்கவைத்துக் கொள்ள தற்போது அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் இயக்குனர்களுடன் கைகோர்த்துள்ளார்.

அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா40, சிறுத்தை சிவா படம், வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் என வரிசைகட்டி நிற்கின்றன. சூரரைப் போற்று படத்திற்கு முன்பே சூர்யா பா ரஞ்சித் கூட்டணியில் ஒரு படம் நடிக்க வேண்டியிருந்தது.

கபாலி படத்தை இயக்கிய பின்னர் பா ரஞ்சித் சூர்யாவை சந்தித்து பாக்ஸிங் சம்பந்தப்பட்ட விளையாட்டை மையப்படுத்திய படத்தின் கதையை கூறியுள்ளார். கதை சூப்பராக இருந்தாலும் அது குறிப்பிட்ட சமூகத்தினரை பற்றி மட்டுமே பேசுவதுபோல் இருப்பதை அறிந்த சூர்யா அந்த படத்தில் இருந்து விலகியதாக சூர்யா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்தக் கதையைத்தான் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற பெயரில் இயக்கியுள்ளதாக கூறுகின்றனர். சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் புகைப்படங்களை பார்க்கும்போது அந்த படத்தில் சூர்யா மட்டும் நடித்திருந்தால் படம் மாஸ்டர் பீஸாக அமைந்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

suriya-pa-ranjith-cinemapettai
suriya-pa-ranjith-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்