சூர்யாவை பழி வாங்கிய கௌதம் மேனன்.. கிட்டார் கம்பி அறுந்து போன சோகம்

சூர்யா மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான கிட்டார் கம்பி மேலே நின்று என்ற படத்தை பார்த்த பிறகுதான் ரசிகர்களுக்கு ஏன் விஜய், கௌதம் மேனன் படங்களில் நடிக்க மறுக்கிறார் என்ற காரணம் தெளிவாகப் புரிந்துள்ளது.

கவுதம் மேனனிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தளவுக்கு சமீபகாலமாக தன்னுடைய படங்களை தரமில்லாமல் இயக்கி வருகிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தோடு கௌதம் கேரியர் முடிந்துவிட்டது.

அதன் பிறகு என்னை அறிந்தால் திரைப்படம் வெளியானாலும் அந்த படம் முழுக்க முழுக்க அஜித்திற்காக மட்டுமே ஓடியது. ஒருவேளை அந்த படத்தில் அஜீத் நடிக்கவில்லை என்றால் அந்த படத்தின் கதி என்ன ஆகியிருக்குமோ.

அதன்பிறகு சூர்யாவை வைத்து துப்பறியும் ஆனந்த் என்ற படத்தை இயக்கினார் கவுதம் மேனன். ஆனால் அந்த படத்தின் கதையில் பெரிய அளவு சூர்யாவுக்கு நம்பிக்கை இல்லாததால் சில நாட்கள் படப்பிடிப்புடன் அந்த படத்திற்கு டாட்டா காட்டி விட்டார்.

அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து எதை எதையோ சொல்லி மீண்டும் சூர்யாவை தன் பக்கம் இழுத்து வந்துள்ளார் கௌதம் மேனன். கௌதம் மேனனுக்கு கம்பேக் கொடுக்க வேண்டும் என்று யோசித்த சூர்யாவுக்கு தற்போது அவரது அடுத்தடுத்த படங்கள் ஓடுமா என்கிற அளவுக்கு சோதனையை கொடுத்துள்ளது கிட்டார் கம்பி மேலே நின்று என்ற குறும்படம்.

நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னம் 9 இயக்குனர்கள் மற்றும் 9 கதைகளை வைத்து தயாரித்த நவரசா என்ற ஆந்தாலஜி சமீபத்தில் வெளியானது. இதில் கார்த்திக் நரேன் இயக்கிய பிராஜக்ட் அக்னி என்ற படம் மட்டுமே ஹிட்டடித்தது.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யா மற்றும் கௌதம் மேனன் கூட்டணியின் கிட்டார் கம்பி மேல் ஏறி நின்று என்ற குறும்படத்தை ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய முந்தைய படங்களை வைத்து அப்படியே களமிறக்கியுள்ளார். எப்பா போதுமடா சாமி என சூர்யா ரசிகர்களே தலை தெறித்து ஓடும் அளவுக்கு படத்தை எடுத்து வைத்துள்ளார் கௌதம் மேனன். இதிலிருந்து சூர்யா ரசிகர்கள் சூர்யாவிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான், தயவுசெய்து கௌதம்மேனனை கிட்ட சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்பதுதான்.

guitar-kambi-mela-nindru-navarasa
guitar-kambi-mela-nindru-navarasa
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்