சிம்புவின் அடுத்த மூன்று படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் இவர்தான்.. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்!

சிம்புதான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களில் லக்கி ஹீரோவாக வலம் வருகிறார். பலருக்கும் ஒரு பட வாய்ப்பே கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சிம்புவுக்கு மட்டும் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் அவர் ரீ எண்ட்ரி கொடுத்து ஒரு வெற்றி படம் மூலம் கொடுக்கவில்லை என்பதும் கூடுதல் தகவல்.

ஈஸ்வரன் என்ற சுமாரான வெற்றி படத்திற்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மாநாடு படத்தை தான். அரசியல் படங்களிலேயே இப்படி ஒரு வித்தியாசமான படத்தை இதுவரை பார்த்ததிருக்க வாய்ப்பில்லை என படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.

ஆனால் படம் வந்தால்தான் அது ஏற்கனவே வந்த கதையா, வராத கதையா என்பது தெரியவரும். இது ஒருபுறமிருக்க அடுத்ததாக சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணியில் நதிகளில் நீராடும் சூரியன் என்ற படம் உருவாக உள்ளது. இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

அதனைத் தொடர்ந்து மேலும் சிம்புவை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க முன்வந்துள்ளதாம் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். அவர்கள் தயாரிக்கும் மூன்று படங்களில் இரண்டு படங்கள் சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்புவை வைத்து ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவதற்கே தயாரிப்பாளர்கள் தகிடுதத்தம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே நேரத்தில் சிம்புவை வைத்து மூன்று படங்களை தயாரிக்கும் இவரின் மனதைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் என கோலிவுட் வட்டாரங்களில் கிண்டலடிக்கிறார்கள்.

simbu-gautham-menon-cinemapettai
simbu-gautham-menon-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்