மேடையில் ஏமாற்றிய சித் ஸ்ரீராம்.. கவலையில் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் அடியே பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தனது இனிமையான குரலால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

சித் ஸ்ரீராம் பாடகராக மட்டுமல்லாமல் வானம் கொட்டட்டும் படத்தில் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் வலிமை படத்தில் அம்மா பாடல் லிரிக்ஸ் வீடியோ வெளியானது. இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த அம்மா பாடலில் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என்று தொடங்கும் இப்பாடல் யூடியூபில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்கழியில மக்களிசை என்ற நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கோலாகலத் திருவிழாவாக ஹிப் ஹாப் அண்ட் ரேப் என பெயரிடப்பட்டு நடந்தது.

இந்நிகழ்ச்சியில் சித்ஸ்ரீராம், நடிகை ரித்விகா என பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் பேசிய சித் ஸ்ரீராம் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது மிக பெருமையாக இருக்கிறது நான் வெகுவாக ரசித்தேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார். அதுமட்டுமல்லாமல் கவிஞர் தனிக்கொடி மார்கழியில் மக்களிசை பார்ப்பது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

அதன்பிறகு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சித் ஸ்ரீராம் மேடையில் பாடினார். அண்மையில் வலிமை படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய அம்மா பாடல் தான் பாடுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படத்தின் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலைப் பாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்