அநியாய சம்பளம் கேட்ட பிரபல நடிகை.. கடும் கோபத்தில் சங்கர்

இப்போதுதான் ஒரு வழியாக எல்லா பஞ்சாயத்தும் முடிந்து சங்கர் தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.இந்த நேரத்தில் சம்பளத்தை காரணம் காட்டி பிரபல நடிகை ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பது சங்கர் தரப்பை அதிருப்தி அடையச்செய்துள்ளது.

இந்தியன் 2 பஞ்சாயத்திற்கு பிறகு தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தற்போது சம்பள விஷயத்தில் அவர் முரண்டு பிடிப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஷங்கர் மற்றும் ராம்சரண் இணையும் படத்தை தெலுங்கு சினிமாவின் பெரிய தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வருகிறார். இந்த படத்திற்காக முதலில் கியாரா அத்வானி சுமார் 4.5 கோடி சம்பளம் கேட்டாராம்.

தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் சம்பளத்தில் இருந்து இறங்கி வரமாட்டேன் என கடந்த சில மாதங்களாக அடம் பிடித்துள்ளார். இதனால் கடுப்பான சங்கர் முதலில் சம்பள விஷயத்தை முடித்து விடுங்கள் என தயாரிப்பு தரப்பிடம் கடிந்து கொண்டாராம்.

இதனால் கியாரா அத்வானியிடம் சமரசம் பேசச்சென்ற தயாரிப்பாளர் தில் ராஜூ ஒருவழியாக பேசி 3.75 கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டாராம். படத்தில் இந்தி நடிகை இருந்தால் ஹிந்தியில் பிசினஸ் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் கியாரா அத்வானி விட்டுக்கொடுக்க மனதில்லாமல் சம்பளத்தில் மட்டும் சமரசம் செய்து பேசி ஓகே செய்து விட்டனர்.

kiara-advani-cinemapettai
kiara-advani-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்