ஷங்கரின் அடுத்த பட வில்லன் இந்த ஹீரோவா? மிரட்டல் தான்!

பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போதுதான் சங்கர் தன்னுடைய அடுத்த படத்தை வேலைகளை விறுவிறுப்பாக தொடங்க நேரம் வந்துள்ளது. அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரு படத்தை எடுக்க உள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ஏற்கனவே உருவாகி பாதியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் திரைப்படமான இந்தியன் 2 படத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு சங்கர் படம் இயக்க முடியாத சூழ்நிலை கூட உருவானது.

ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது ராம்சரண் படத்தை விறுவிறுப்பாக முடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த படத்தை தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் பணியாற்ற உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் விரைவில் தொடங்க உள்ள சங்கர் மற்றும் ராம்சரண் படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது வில்லனாக நடிக்க வைக்க மலையாளத்தில் டாப் நடிகராக வலம் வரும் பகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவரும் ஒப்புக் கொள்வார் என தெரிகிறது.

அதற்கு காரணம் ஏற்கனவே தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகையால் ஹீரோ இமேஜை மையப்படுத்தாமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பார் என்ற நம்பிக்கையில் சங்கர் அவரை அணுகியுள்ளாராம்.

fahad-fazil-cinemapettai
fahad-fazil-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்