மகள் கல்யாண ராசியால் ஷங்கருக்கு வந்த நல்ல செய்தி.. இனி தலைவனை கையிலயே பிடிக்க முடியாது!

ஏற்கனவே தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துகொடுத்த சந்தோஷத்தில் இருக்கும் ஷங்கருக்கு இரட்டை சந்தோசமாக வந்துள்ளது லைகா பஞ்சாயத்து பிரச்சனைக்கான விடிவு. இனி ஷங்கரை யாராலும் தடுக்க முடியாது என்கிறது சினிமா வட்டாரம்.

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் உருவாகி வந்தது. மிகப்பெரிய பொருட்செலவில் லைக்கா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வந்தது.

திடீரென இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில் அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் விஷயத்தில் சங்கர், லைக்கா மற்றும் கமலஹாசன் ஆகியோருக்கிடையே பஞ்சாயத்து வந்தது.

இதன் காரணமாக கமல் இந்தியன் 2 படம் இப்போதைக்கு முடியாது என கைவிரித்து விட்டார். அதனைத் தொடர்ந்து சங்கரும் பாலிவுட், தெலுங்கு என வேறு பக்கம் சென்று விட்டார். இதனால் கடுப்பான லைக்கா நிறுவனம் ஷங்கர் மீது இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

shankar-lyca-case-cinemapettai
shankar-lyca-case-cinemapettai

ஆனால் நீதிமன்றம் அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து சங்கருக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கிவிட்டது. இதனால் ஏற்கனவே மகள் திருமணத்தின் மூலம் சந்தோஷத்தில் இருந்த ஷங்கரை மேலும் குஷியாக்கும் விதமாக இந்த செய்தி அமைந்துள்ளது.

இதனால் சங்கர் அடுத்த மாதம் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிக்கும் படம் உருவாக்க இனி எந்த தடையும் இல்லாததால் இனி சங்கரை கையிலேயே பிடிக்க முடியாதாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்