21வருடங்கள் பிறகு பிரம்மாண்ட படத்தில் நடித்திருக்கும் ஷாலினி.. உற்சாகத்துடன் வரவேற்ற அஜித்

21 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பிரம்மாண்டமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. தமிழ்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் ஷாலினி.

இதைதொடர்ந்து 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் கதாநாயகியாகஅறிமுகமானார். தளபதி விஜய்க்கு ஜோடியாக ஷாலினி நடித்த இத்திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து அஜித்தின், அமர்க்களம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அஜித்தை காதலித்து 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, தற்போது மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதனிடையே 2001 ஆம் ஆண்டு வெளியான பிரியாத வரம் வேண்டும் திரைப்படத்தில் கடைசியாக ஷாலினி நடித்திருந்தார்.

தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்தில் ஷாலினி ஒரு சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி பரவலாக வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, விக்ரம், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஆனால் தற்போது ஷாலினி அஜித் நடித்துள்ள தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அஜித் நல்ல திரைப்படம் தான் நடிக்கலாம் என்று ஷாலினியை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க கூறி உற்சாகப்படுத்தி உள்ளார். இதனிடையே ஷாலினி அஜித் நடிப்பை 21 ஆண்டுகளுக்குப் பின் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே திருமணத்திற்கு பின் சிம்ரன்,ஜோதிகா,ஸ்னேகா உள்ளிட்ட 90ஸ் நடிகைகள் தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து வரும் வரிசையில் ஷாலினி அஜித்தும் இடம்பெற்றுள்ளது, ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்