இவர்களை இப்படித்தான் கொல்லவேண்டும்.. மேடையில் கொட்டி தீர்த்த ஷகிலா

நடிகை ஷகிலா படத்தில் நடிப்பதை தாண்டி சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றி வெளிப்படையாக அவ்வப்போது கூறி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் மூலம் தற்போது ஏகப்பட்ட படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. அதனால் ஷகிலா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஷகிலா ஊடகங்களுக்கு அளிக்கும் பேட்டியில் கற்பழிப்பவர்களை பற்றி தான் அதிகமாக பேசுவார். குறிப்பாக அவர்களுக்கு அதிகப்படியான தண்டனை கொடுக்க வேண்டும். இனிமேல் இந்த மாதிரியான தவறு செய்வதற்கு கூட யோசிக்க வேண்டும் போன்று காரசாரமாகவும் பல மேடைகளில் பேசியுள்ளார்.

shakeela
shakeela

 

தற்போது கூட உச்சம் படத்தின் பிரஸ்மீட்டில் அந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களை பற்றி பாராட்டிப் பேசினார் ஷகிலா. மேலும் அந்த படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பற்றியும் கூறினார். அத்துடன் கற்பழிப்பவர்களை கல்ப் போன்ற நாடுகளில் கடுமையான தண்டனை கொடுக்கப்படும். அந்த மாதிரிதான் தண்டனை கொடுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

ஷகிலா பேசிய பேச்சுக்கு பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். ஷகிலா பேசியது சரியானதுதான் எனவும் ஆனால் சினிமாவில் அவ்வப்போது கேவலமான காட்சிகளும் கேவலமான படங்களில் நடிப்பதால் பலரும் சீரழிந்து வருவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் சினிமாவில் பணத்திற்காக நடிக்கும் நடிகைகள் மேடை பேச்சுகளில் மட்டும் ஏன் சமூகத்தைப் பற்றி பேசி வருகிறார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதாவது ஷகிலா அருவருக்கத்தக்க படங்களில் நடித்துள்ளார். இவர் கற்பழிப்பு பற்றி பேசுவது சரியானது தானா? முதலில் இவரல்லவா அதனை பின்பற்ற வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்