விஷப்பாம்பு, ஊரை கூட்டி கேவலப்படுத்திய மாமியார்.. அவமானப்பட்ட ராதிகா எடுக்கும் முடிவு

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடித் திருப்பங்கள் வரிசையாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 25 வருடங்களாக கோபியுடன் அர்த்தமற்ற வாழ்வை வாழ்ந்ததால் இனி அவரை அண்டிப் பிழைக்கக் கூடாது என்பதற்காக கோபி கேட்ட விவாகரத்தை பாக்யாவே முன்வந்து கொடுத்திருக்கிறார்.

இவ்வாறு பாக்யா-கோபி பிரிவிற்கு முழு காரணமும் ராதிகாதான் என, கோபியின் அம்மா ஈஸ்வரி கோபத்தின் உச்சத்துக்கே சென்று, ராதிகாவை சந்தித்து கண்டபடி திட்டி நாரடிக்கிறார். ஊரேநின்று வேடிக்கை பார்ப்பதால் அவமானம் தாங்கமுடியாத ராதிகா கூனிக்குறுகுகிறார்.

ராதிகாவின் இந்த நிலையை பார்க்க முடியாத அவருடைய அம்மா மற்றும் அண்ணன் இருவரும் ஈஸ்வரியை திட்டினாலும், ராதிகாவின் தரப்பில் தான் தப்பு இருப்பதாக ஊர் மக்கள் அனைவரும் புரிந்து கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் பாக்கியலட்சுமியின் குடும்பம் அழிந்து போனதற்கு காரணமான ராதிகா நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடியாது.

‘நீ நாசமாய்ப் போய் விடுவாய்’ என ஈஸ்வரி மண்ணை வாரி ராதிகா முன்பு எறிகிறார். கோபியின் சுயரூபம் தெரிந்த பிறகு ராதிகா, அவரை விட்டு விலக நினைத்தார். ஆனால் அதை யாரும் கொஞ்சம்கூட புரிந்துகொள்ளாமல் முன்பு பாக்யாவும் தற்போது கோபியின் அம்மாவும் வரிசையாக வந்து அசிங்கப்படுத்தியதால், அதை ராதிகாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

ஒரு தப்பு செய்யாமலேயே, அந்த தப்பை செய்ததாக ஆள் மாற்றி ஆள் வந்து திட்டுவதால், அந்தத் தப்பை பேசாமல் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் ராதிகா கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கப்போகிறார்.

இதற்கிடையில் ராதிகாவின் அம்மாவும் ராதிகாவிற்கு ஏற்றி விடுவதால், கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தப்பில்லை என்ற முடிவிற்கு வருகிறார். இனி வரும் நாட்களில் கோபியிடம் கோபப்படாமல் அவரைத் திருமணம் செய்து கொண்டு வேறொரு வாழ்க்கையை ராதிகா வாழ போகிறார். அதன் பிறகு இந்த சீரியலில் பாக்யாவிற்கு வில்லியாக விஷப் பாம்பாக ராதிகா மாறி தன்னுடைய கொடூர முகத்தை காட்ட போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்