Tamil Cinema News | சினிமா செய்திகள்
250 படங்களில் நடித்த சபிதா ஆனந்த் .. சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்த சம்பவம்
தமிழ் சினிமாவில் 90 களில் நாயகிகளாக வலம் வந்த பலரும் இப்போது சீரியல்களின் சீரியஸான ரோல்களை நடித்து வருகின்றர். வெள்ளித்திரையில் ரசிக்ககப்பட்ட பலரும் தங்கள் ரசிகர்களை மீண்டும் மகிழ்விக்க சின்னத்திரையில் வருவதுண்டு. ராதிகா முதல் ரம்யா கிருஷ்ணன் வரை என இந்த பட்டியலும் மிக நீண்டதே.
அந்த வகையில் இப்போது விஜய் டிவியில் ஔிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் நாச்சியார் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார் நடிகை சபிதா ஆனந்த். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிறகு நாயகியின்தங்கை ரோலுக்கும் தயாராகினார்.
மேலும் பல படங்களில் நியகியாகவும் நடித்த சபிதா ஆனந்த் மலையாளத்தில் மற்றும் 100க்கும் மேற்பட்ட படங்களை நடித்தவர் தமிழில் தலைவாசல் மாயி உட்பட சில படங்களில் நடித்தள்ளார். அப்போது இருந்த சபிதா ஆனந்தின் புகைப்படங்களுக்கும் இப்போது இருக்கும் நாச்சியார் கேரக்டருக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது போல இருந்தாலும் தனது நடிபை்தமிழ் சினிமாபை கொண்டு கலக்கி வருகிறார்.

sabitha anand
எப்போதுமே சீனியர் நடிகர்களுக்கு இருக்கும் மரியாதையோடு பெரிய திரையிலிருந்து சின்னத்திரை என்கிற அனுபவங்களோடு மிரட்டி.வருகிறார் சபிதா. தூர்தசனில் ஔிபரப்பான கடல்புறத்தில் என்கிற சீரியலின் வாயிலாய் சின்னத்திரை பிரவேசம் அடைந்த சபிதா கோலங்கள் ராஜராஜேஸ்வரி சொர்க்கம் பெண் ஆகிய சீரியல்களில் நடித்து தனது திறமையை மீண்டும் வளர்த்துக்கொண்டார்.
அனைத்து மொழிகளிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு இப்போது சின்னத்திரையும் பெருமளவான ரசிகர்களை கொடுத்து வருகிறது.
