கோபியிடம் முதல் நாளே வெறுப்பை சம்பாதிக்கும் ராதிகா.. தாலியை கழட்டி எறிந்த பாக்யா

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்துக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் தன்னுடைய மூன்று பிள்ளைகள், மனைவி, அப்பா அம்மாவை தவிக்கவிட்டு அவர் மட்டும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபியை வெறுத்த பாக்யா தாலியையும் கழட்டி போடும் அளவுக்கு வருகிறார். இன்னிலையில் இவ்வளவு நாள் பாக்யாவின் தோழியாக இருந்த ராதிகா தற்போது தன்னுடைய சுயரூபத்தை காண்பித்து அவருக்கு கொடூரமான வில்லியாக மாறிவிட்டார்.

Also Read: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட விஜய் டிவி.. பற்றி எரியும் கள்ளக்காதல் விவகாரம்

இனிமேல் பாக்யா மற்றும் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பார்க்க கூடாது பேசக்கூடாது என்று ராதிகா கோபிக்கு எச்சரிக்கை விடுக்கிறார். மேலும் இனியாவையும் பள்ளிக்கூடத்தில் சென்று பார்க்கக் கூடாது எனவும் சொல்லிவிடுகிறார்.

முதல் இரவில் இப்படி நடந்து கொள்கிறாரே என கோபியும் ராதிகாவின் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இனி பாக்யாவின் நினைப்பு கொஞ்சம் கூட வரக்கூடாது என்றும் கோபியிடம் ராதிகா சத்தியம் வாங்குகிறார். அதையும் கோபி செய்து கொடுத்தபின் ராதிகா தனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கையை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்று சந்தோசமாக வாழ தயாராகிறார்.

Also Read: புருஷனை இறுக்கிப் பிடித்த மனைவி.. கொடூரமான வில்லியாக மாறிய ராதிகா

அதுமட்டுமின்றி ராதிகா மற்றும் கோபி இருவரும் ஹனிமூன் ட்ரிப் பிளான் போட்டு கிளம்புகின்றனர். அதே சமயத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி குடும்பத்தின் மகா சங்கமம் அடுத்தவாரம் ஒளிபரப்புவதால் அவர்களும் கொடைக்கானலுக்கு போகலாம் என்று கோபி-ராதிகா செல்லும் அதே இடத்திற்கு கிளம்புகின்றனர்.

அங்கு கோபியை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவரை வறுத்தெடுக்கப் போகின்றனர். ஆனால் கோபியை பற்றி துளிகூட கவலைப்படாத பாக்யா, தன்னுடைய கேட்டரிங் தொழிலில் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறி விரைவில் தொழிலதிபராகவும் மாறப் போகிறார்.

Also Read: விஜய் டிவியின் டிஆர்பி-யை நொறுக்க சன் டிவி போட்ட பிளான்.. கைகொடுக்குமா தளபதியின் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்