சீரியலில் நடிக்க ஆசைப்பட்ட நடிகைக்கு அடிச்சது பம்பர் பிரைஸ்.. அதுவும் எதுல தெரியுமா?

தமிழ் சினிமாவில் பல நடிகைகளும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என நினைப்பதுண்டு. ஆனால் நிறைய பேருக்கு அந்த சந்தர்ப்பம் அமைவதில்லை. தற்போது சீரியலுக்கு குறிவைத்த ஒரு நடிகைக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததுதான் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஜே எப் எல் புரொடக்ஷன் சார்பில் ஜேகே தயாரிக்கும் லாகின் என்ற படத்தில் அப்புச்சி கிராமம் படத்தில் நடித்த பிரவீன்னும், அந்தகாரம் படத்தில் நடித்த வினோத் கிஷன்னும் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஒரு புதுமுக கதாநாயகியை அறிமுகமாக உள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரீத்தி என்பவர் தான் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இவருக்கு சொந்த ஊர் சிதம்பரம் அப்பா வெளிநாட்டு பிசினஸ்மேன். தற்போது இவரும் அவரது அண்ணனும் சென்னையில் படிப்பிற்காக குடியேறியுள்ளனர். இவர் கஷ்டப்பட்டு பள்ளியில் படித்து முதல் மார்க் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றால் அவரது அம்மா இவரை புகழாமல் எப்போதும் சீரியல் நடிகைகள் தான் புகழ்ந்து பேசுவார்.

Vinoth Kishan
Vinoth Kishan

அதனால் எப்படியாவது சீரியலில் கதாநாயகியாக நடித்து விட வேண்டும் என நினைத்து தான் நடிக்க வந்ததாக பிரீத்தி தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது ஐடியில் வேலைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய போட்டோவை சில சினிமா ஏஜென்சிகள்டம் கொடுத்து வைத்து சீரியல் வாய்ப்பு இருந்தால் சொல்லுங்கள் எனக் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால் ஏஜென்சி திடிரென போன் செய்து சினிமாவில் நடிக்கிறீர்களா என கேட்டுள்ளனர். அப்படி வந்த வாய்ப்புதான் லாகின் பட வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தின் இயக்குனர் எதிர்பார்த்தது போலவே முக அமைப்பு இருந்ததால் இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததாகவும். தற்போது சீரியலில் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் லாகின் படம் வெளிவந்த பிறகு மக்களிடம் எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதை பார்த்து தான் சீரியலா, சினிமாவா என்பதை முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்