காசு பணத்தைவிட அது தான் ரொம்ப முக்கியம்.. அஜித்தின் அந்த மனசு தான் சார் கடவுள்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று ஒரு பழமொழி கூறுவார்கள் அல்லவா அது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ அஜித் ரசிகர்களுக்கு பொருந்தும். ஏனெனில் வலிமை படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பல போராட்டங்களை தாண்டி வலிமை படம் வரும் பொங்கல் அன்று நாடு முழுவதும் மூன்று மொழிகளில் வெளியாக இருந்தது. பட வெளியீட்டிற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே தமிழ் அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பித்துள்ளது. இந்த சூழ்நிலையில் படம் வெளியானால் நிச்சயம் வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்பதால் படக்குழுவினர் வலிமை படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால் அஜித் நினைத்தால் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு மிகவும் ஈஸியாக அனுமதி பெற முடியும். அவர் நினைத்தால் நிச்சயம் அதை செய்திருக்கலாம். ஆனால் அஜித் அவரின் படம் வெளியாகி வெற்றி பெற்று வசூலை குவிப்பதைவிட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என முடிவு செய்துள்ளார்.

அதனால் தான் பாதுகாப்பு கருதி அவரது படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார். அஜித்தின் இந்த செயலால் அவர் மீதான மரியாதை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே அஜித் ஏராளமான நல்ல விஷயங்களை செய்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது படத்தின் வெற்றியை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என கருதி அஜித் எடுத்துள்ள இந்த முடிவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்