தனத்தை பதம் பார்த்த மீனாவின் அப்பா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் நிகழ்ந்த அதிரடி திருப்பம்!

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்-தம்பி பாசத்தையும், கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் வெளிச்சம்போட்டு காட்டுவதால், இந்த சீரியல் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல்வேறு கொண்டாட்டங்கள் அரங்கேறுகிறது சமீபத்தில் தனத்தின் மகன் பாண்டியனுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கயல் பாப்பாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர்ஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்களும் குதூகலம் அடைகின்றனர் என்பதை உணர்ந்த சீரியலின் இயக்குனர், தற்போது மீண்டும் ஒரு கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ளார். அதாவது கயல் பாப்பாவின் காதுகுத்து விழாவை சிறப்பாக செய்ய, மீனாவின் அப்பா முடிவெடுத்துவிட்டார்.

இதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் வந்து ஜெகநாதன் பேச, அதற்கு மூர்த்தியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மீனாவின் குழந்தைக்கு தனத்தின் அண்ணன் தாய்மாமாவாக அமர வேண்டும் என்று தனம் சொல்ல, அதற்கு மீனாவின் அப்பா மறுப்பு தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு மீனாவின் அப்பாவுடைய அண்ணன் பையன் வெளிநாட்டிலிருந்து வர உள்ளதாகவும், அவர் மடியில்தான் கயலை உட்காரவைத்து காதுகுத்த போவதாகவும் தனத்தின் மூக்கை மீனாவின் அம்மா, அப்பா இருவரும் முடித்துவிட்டனர்.

இதனால் சில நேரம் பாண்டியன் ஸ்டோர் ஸ் சீரியலில் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சிறிது நேரத்திலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சகஜ நிலைக்கு வந்து விட்டது. எனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலின் அடுத்த கொண்டாட்டம் இன்று நிகழ உள்ளதால் ரசிகர்கள் அதை காண ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்