மெகா சங்கமத்திற்குப் பிறகு ஊத்தி மூடப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கண்ணன் எடுத்த அதிரடி முடிவு!

விஜய் டிவியில் தற்போது மெகா சங்கத்தில் இணைந்து கலகலப்பாக ஒளிபரப்பாகி வரும் மக்களின் விருப்பமான சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் தமிழும் சரஸ்வதியும். தற்பொழுது மெகா சங்கம ஜாலியான குடும்ப கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி மக்களை கவர்ந்து வருகின்றன.

இதில் மகாபலிபுரம் செல்ல தயாராகி வருகின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் தமிழும் சரஸ்வதி குடும்பமும். இந்நிலையில் அடுத்த காட்சியாக, கண்ணன் சாலையில் நடந்து செல்வதைப் பார்த்த ஐஸ்வர்யா கண்ணனிடம் சென்று எங்கு இவ்வளவு விரைவாக சென்று கொண்டிருக்கிறாய் என கேட்டதும், நம்ம கடையை திறக்க போகிறேன் என்றார் கண்ணன்.

இதைக்கேட்டு ஷாக்கான ஐஸ்வர்யா எதுக்கு கண்ணா, இதெல்லாம் நமக்கு தேவையா நம்பல குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் நீ இப்படி செய்தால் அதன் விளைவு பயங்கரமாக இருக்கும் என்று ஐஸ்வர்யா கூறினார். பின்னர் கண்ணன் இந்த கடையை உருவாக்கி வாடிக்கையாளர்களை பிடிக்க எங்கள் குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது.

இப்பதான் கடையில் நல்ல வியாபாரம் நடந்து ஒரு நல்ல நிலைக்கு வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் கடைக்கு ஒரு வாரம் லீவுவிட்டாள் கடையோடு நிலைமை அவ்வளவுதான் என கூறினார். அதற்கு ஐஸ்வர்யா சரி உனக்கிட்டதான் சாவி இல்லையே அப்ப நீ எப்படி கடையை திறப்பாய்,வேணாம் கண்ணா என சமாளித்து வருகிறார்.

அப்போது சாலையில் ஒருவர் கண்ணனைப் பார்த்து என்னப்பா கடைக்கு இப்படி இவ்வளவு நாளா லீவு விட்டுட்டீங்க இனி கடைய ஊத்தி மூட வேண்டியதுதான் என்று கூறிவிட்டு, மேலும் இனி லட்சுமிஸ்டோர்ஸ் தான் கொடிகட்டிப் பறக்கப் போகிறது போல என சொல்லி விட்டு கிளம்பினார்.

இதை கேட்டு அதிர்ந்து போன கண்ணன் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். எனவே வரும் எபிசோடில் கண்ணன் கடையை திறக் வேண்டுமென்று அதிரடி முடிவை எடுத்து குடும்பத்துடன் ஒன்று சேர்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்