கௌதம் மேனனை தேடிப்போய் வாய்ப்பு கொடுக்கும் முன்னணி இயக்குனர்கள்.. இதுதான் காரணம்

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குநர் கௌதம் . இவர் காதல் மற்றும் ரொமான்டிக் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் முதலில் இயக்கிய மின்னலே திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற ரொமான்டிக் திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது. இது தவிர இவர் இயக்கிய த்ரில்லர் படங்களான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இவர் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்தார்.

இவர் ஒரு இயக்குனராக மட்டுமின்றி நடிப்பிலும் திறமையானவர். ருத்ர தாண்டவம், கோலிசோடா 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாவ கதைகள் என்ற வெப்சீரிஸில் இவர் நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்துள்ளார்.

அவருடைய நடிப்பை பார்த்து மற்ற இயக்குனர்கள் இனி நடிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என்று கூறி வருகின்றனர். இவருடைய நடிப்பு திறமை ஒரு பக்கம் இருந்தாலும் சமீப காலமாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய படங்கள் மக்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை என்பதும் ஒரு காரணம்.

இவர் இயக்கத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா, அச்சம் என்பது மடமையடா போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை. மேலும் இவர் தற்போது இயக்கி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படம் பல பிரச்சினைகளில் உள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகும் இத் திரைப்படம் ஆரம்பித்து பல வருடங்களாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பு வரவில்லை. அதனால் தான் அவரை அனைவரும் நடிக்க கூப்பிடுகிறார்களா என்று ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்